நடிகைகள் பொதுவாக திருமணத்தை தள்ளிப் போடுவதற்கான காரணம் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிடும் என்பதற்காக தான். தங்களது மார்க்கெட் உள்ளவரை படங்களில் நடித்து சம்பாதித்து அதன் பிறகு செட்டிலான உடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். சில நடிகைகள் வசதியான தொழிலதிபரை பார்த்து மார்க்கெட் உள்ள போது கல்யாணம் முடித்துக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் திருமணத்திற்கு பிறகு கணவனுடன் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி வெளிப்படையாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கொள்ளை அழகுடன் இருக்கும் நடிகை பிரபல நடிகருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்கள் இருவருக்கு தான் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பிரேக்கப் ஆகிவிட்டது.
இதற்கு காரணம் அந்த நடிகர் மிகவும் முரட்டுத்தனமானவர். இதனால் நடிகையை துன்புறுத்தி இருக்கிறார். சில வருடங்கள் காதலுக்காக எல்லாவற்றையும் சகித்து கொண்டிருந்த நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் அந்த உறவை முறித்துக் கொண்டார். ஆனாலும் அவரது இரண்டாவது வாழ்க்கை மிகவும் அற்புதமாக அமைந்தது.
மிகப்பெரிய குடும்பத்திற்கு மருமகளான நடிகை இப்போது மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருக்கும்போது எந்த ஒரு எதிர்பார்ப்பும் அதில் இருக்கக் கூடாது. அந்தரங்க உறவில் இருக்கும் போது காதல் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று நடிகை கூறி இருக்கிறார்.
என்னதான் நடிகை ஒரு நல்ல விஷயத்தை சொன்னாலும் கூச்சமே இல்லாமல் இதைப்பற்றி பேசுவது என நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள். ஆனால் நடிகை ஒரு நல்ல எண்ணத்தில் தான் கணவன் மனைவி என்பவர்கள் இப்படி தங்களது வாழ்க்கையை நடத்தினால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற நோக்கத்தில் சொல்லி உள்ளார்.