நடிகைகள் என்றாலே பொது சொத்து என்பது போல சினிமாக்காரர்களால் மட்டுமல்லாமல் வெளியில் பலராலும் அட்ஜஸ்மென்ட்க்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சாதாரணமாக ஒரு விளம்பரத்தில் நடித்தால் கூட அந்த தொழிலதிபருடன் உல்லாசமாக இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் அரசியல் பிரபலம் ஒருவர் நடிகை மீது ஆசைப்பட்டு அடைய முயற்சி செய்திருக்கிறார். ஆனால் நடிகையோ விடாப்பிடியாக இதற்கு மறுத்து விட்டார். ஆனால் அந்த பிரபலம் தனக்கு இருக்கும் செல்வாக்கு மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி நடிகையை தனது வழிக்கு கொண்டு வந்தார்.
அது ஒரு நாள் உடன் முடியாமல் தொடர்கதையாக மாறிவிட்டது. இதனால் நடிகை தினம் தினம் சித்திரவதை அனுபவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத நடிகை அதே அரசியல் கட்சியில் பெரிய தலையிடம் இது குறித்து கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த விஷயம் தெரிந்தும் கண்டும் காணாமல் அவர் சென்று விட்டாராம். ஒரு பெண்ணின் கஷ்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் நடிகை பத்திரிக்கையாளர்களிடம் இந்த விஷயத்தை போட்டு உடைத்து விட்டார். தவறு செய்பவர் கேள்வி கேட்க முடியாதவர் என் பெரிய பொறுப்பில் உள்ளார் என்றும் விளாசிவிட்டார்.
ஆனால் கடைசிவரை நடிகையை துன்புறுத்திய பிரபலம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் நடிகையை பெரிய அளவில் பாதித்தது. தப்பு செய்பவர்கள் எல்லோரும் வெளியில் சகஜமாக இருக்கும் நிலையில் நடிகைகளை கட்டாயத்திற்கு உள்ளாக்கி அவர்களது வாழ்க்கையில் சீரழித்து விடுகின்றனர்.