நடிகைக்கு அவ்வப்போது பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தமிழில் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நடிகை பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோசியல் மீடியாவே அல்லோலப்படும் அளவிற்கு நடிகை தனது கணவருடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ஆனால் தற்போது சத்தமே இல்லாத அளவுக்கு நடிகை சைலன்ட்டாக இருந்து வருகிறார். இதற்கான காரணம் என்னவென்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவரை தான் காதலித்த திருமணம் செய்து கொண்டார்.
கல்யாணத்திற்கு பிறகும் நடிகைக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் கணவரோ படங்களில் நடிக்க வேண்டாம் என கட்டுப்பாடு விதித்தும், நடிகை கேட்காமல் படங்களில் நடித்து வருகிறார். ஒரு புறம் இருக்க தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர் உடன் நடிகை ஓவர் நெருக்கம் காட்டி வருகிறாராம்.
இது கணவருக்கு பிடிக்காததால் கண்டித்துள்ளார். ஆனால் அதற்கும் அடங்காத நடிகை தயாரிப்பாளருடன் பப், பார்ட்டி என சுற்றி வருகிறாராம். சில சமயங்களில் இரவு நேரங்களில் வீட்டுக்கே நடிகை வருவதில்லையாம். பொறுத்த பொருத்து பார்த்த கணவர் திருமணமான 3 மாதத்தில் விவாகரத்து கொடுக்க தயாராகி விட்டாராம்.
ஆனால் நடிகையோ இவர் மீது தான் தப்பு இருப்பது போல பிளேட்டையே மாற்றிவிட்டாராம். மேலும் விவாகரத்து பெற்றால் இன்னும் சுகந்திர பறவையாக சுற்றித் திரியலாம் என்பதால் நடிகையும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாரம். விரைவில் இவர்களது விவாகரத்து செய்தி வெளிவர இருக்கிறது.