நடிகையிடம் அந்தரங்க மயக்கத்தில் இருந்ததால் வந்த வினை.. திட்டமிட்டு பின்னப்பட்ட சதி வலை

சமூகத்தில் ஒரு பெரிய அந்தஸ்துடன் வலம் வந்த அந்த பிரபலம் இப்போது இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத அளவுக்கு ஓரம் கட்டப்பட்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் நடிகையுடன் இவருக்கு இருந்த அந்தரங்க மயக்கம் தான்.

அதுவே அவரை பாழுங்கிணத்தில் தள்ளி விட்டது. பலரும் வியக்கும் அளவுக்கு மரியாதையோடு வலம் வந்த அவர் ஒரே நாளில் தரை மட்டத்திற்கு சென்றார். அதாவது திடீரென ஒரு நாள் இந்த பிரபலம் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களும் வீடியோக்களும் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து நாலா பக்கம் இருந்தும் கிளம்பிய எதிர்ப்பு இவரை ஒரு வழியாகிவிட்டது. மேலும் இவர் குறித்த அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளும் வெளிவந்து பேரை மொத்தமாக காலி செய்து விட்டது. ஆனால் இப்படிப்பட்ட சம்பவம் நடந்ததே ஒரு சதிவலை தானாம்.

அதாவது அந்த பிரபலத்தின் மரியாதையை கெடுக்கவும் அவரை ஓரங்கட்டவும் சில அரசியல் சூழ்ச்சிகள் நடந்திருக்கிறது. அதற்கு அந்த நடிகை தான் பகடை காயாக இருந்திருக்கிறார். தைரியமாக இப்படி ஒரு விஷயத்திற்கு துணை போன நடிகை இன்னும் அந்த பிரபலத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த பிரபலம் இது எதுவும் வேண்டாம் என்று தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். ஆனால் அவர் இருக்கிறாரா இல்லையா என்பது தான் பெரும் கேள்விக்குறி. அந்த அளவுக்கு அவர் இப்போது மீடியா பார்வையில் சிக்காமல் இருக்கிறார்.