Gossip : பிரபலம் ஒருவர் மிகவும் கமுக்கமாக திடீரென திருமணம் செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆரம்பத்தில் மிக சிறிய வயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் பிரபலம் கொஞ்சம் டாமினேடாக இருந்ததால் கணவரிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் பொருத்து பார்த்து சில காலம் வாழ்ந்து வந்த கணவர் இதற்கு மேலும் தாங்க முடியாது என்ன பிரிந்து வந்து விட்டார்.
அதன் பிறகு பிரபலம் சிங்கிளாகவே பார்ட்டி, பப் என சுற்றி வந்தார். அடிக்கடி அவரைப் பற்றிய சர்ச்சையான பேச்சுக்களும் வந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் சில வருடங்களாகவே ஒரு நண்பருடன் பழகி வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரபலத்தின் திருமணத்திற்கான காரணம்
அதாவது ஆரம்பத்தில் விவாகரத்து ஆகவே இந்த நபர் தான் காரணம் என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது. அதோடு இருவரும் நெருங்கி பழகிய நிலையில் நடிகை கர்ப்பமாகிவிட்டாராம். இது வெளியில் தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும் என கருவை கலைக்க முற்பட்டிருக்கின்றனர்.
ஆனால் நடிகைக்கு வயது அதிகமானதால் இப்போது கருவை கலைத்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நடிகைக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது மிகவும் கடினம் என்று கூறியிருக்கின்றனர்.
இதைக் கேட்ட இவர்கள் பேசாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதனால் தான் அவசர அவசரமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வைத்து திருமணத்தை முடித்துள்ளனர்.