Gossip: மங்களகரமான அந்த நடிகை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தார். ஆனால் எடுத்ததுமே ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருந்தாலும் முக்கியமான ஒரு ரோலை ஏற்று நடித்தார். ஆனால் அந்த கதாபாத்திரம் கொஞ்சம் அதிகப்படி கிளாமராக இருந்தது. நடிகை என்னவோ அர்ப்பணிப்போடு தான் நடித்தார்.
ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்ன இருந்தாலும் நடிகை இந்த அளவுக்கு மோசமாகவா நடிப்பார் என வெளிப்படையாகவே எதிர்ப்பை காட்டினார்கள்.
இமேஜ் மொத்தமும் டேமேஜ் ஆயிடுச்சு
படம் வெளியான பிறகு அடுத்தடுத்த படங்கள் கிடைக்கும் என காத்திருந்த நடிகைக்கு அதிர்ச்சி தான் கிடைத்தது. ஏனென்றால் அவரைப் பற்றி வந்த விமர்சனங்கள் அப்படி.
சரி கிடைக்கும் வாய்ப்பை ஏற்கலாம் என்று பார்த்தால் தேடி வரும் கதைகள் எல்லாமே அப்படி இப்படியான கதாபாத்திரங்கள் தான். இதனால் நடிகை மொத்தமாகவே நொந்து போய்விட்டார்.
இருந்தாலும் மற்ற மொழியில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி தற்போது தன்னிடம் கதை சொல்ல வருபவர்களுக்கு ஒரு கண்டிஷன் போட்டு விட்டாராம்.
என்னவென்றால் இனி இந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். குடும்ப பங்கான கதாபாத்திரம் தான் வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
நடிகை என்னவோ இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டார். ஆனால் அது போன்ற கேரக்டர்கள் தான் வரவில்லையாம். இருந்தாலும் நடிகை தன் முடிவில் உறுதியாக இருக்கிறாராம்.