அந்தரங்க மோகத்தால் வழி மாறிய பிரபலம்.. 20 லட்சத்தை சுருட்டிக்கொண்டு கல்தா கொடுத்த கள்ள காதலி

தன்னுடைய கணீர் குரலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர் தான் அந்த பாடகர். இன்றைய இளம் தலைமுறைகளுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் அந்த மூத்த பிரபலம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் சொல்லப் போனால் இவருடைய குரல் தான் அவர்களுக்கு பொருந்தும் என்று சொல்லும் அளவுக்கு அதிக பிரபலமாக இருந்தார்.

இப்படி புகழின் உச்சியில் இருந்த அந்தப் பாடகருக்கு திருமணம் ஆகி மனைவியும், பிள்ளைகளும் இருந்தார்கள். நல்லபடியாக குடும்பத்தை கவனித்துக் கொண்டு மரியாதையுடன் வலம் வந்த அந்த பாடகர் தன்னுடன் சில திரைப்படங்களில் இணைந்து பாடிய பாடகி மீது திடீர் மோகம் கொண்டார்.

அதன் பிறகு அவர் குடும்பத்தையே மறந்து விட்டு தன்னுடைய புது காதலியுடன் உல்லாச வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகிலும் பரவ ஆரம்பித்தது. ஆனால் அந்த பாடகர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

இருப்பினும் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் இது தவறு என்று எடுத்து சொல்லிய போது கூட அவர் யாருடைய பேச்சையும் காது கொடுத்து கேட்கவில்லை. அந்த அளவுக்கு அவர் அந்த பாடகியுடன் காதலில் இருந்திருக்கிறார். ஆனால் தான் செய்தது தவறு என்று அவரே உணர்ந்து திருந்தக்கூடிய ஒரு தருணமும் வந்திருக்கிறது.

அதாவது அந்த பாடகரின் காதலி கிடைத்தவரை லாபம் என்று கிட்டத்தட்ட 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவரை விட்டு பிரிந்து இருக்கிறார். அதன் பிறகு தான் அந்தப் பாடகருக்கு எவ்வளவு பெரிய தப்பு செய்து விட்டோம் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட அந்தப் பாடகர் தன் மனைவியையும் குடும்பத்தையும் நல்லபடியாக கவனிக்க ஆரம்பித்தார். அருமையான குரலால் பலருக்கும் உதாரணமாக இருந்து வந்த இந்த பாடகர் சிறு விஷயத்தில் சறுக்கியது அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தும் செய்தியாக அமைந்தது.