Gossip: ஒரு படம் ஹிட் ஆனதுமே அந்த நடிகை இந்த இடத்தை விட்டு விடக்கூடாது என்று கணக்குப் போட்டு விட்டார். அதைத்தொடர்ந்து ரசிகர்களை இம்பிரஸ் செய்ய அவர் சோசியல் மீடியாவை கையில் எடுத்தார்.
அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. நடிகைக்கு மூன்று எழுத்து நடிகர் உட்பட டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்போது அந்த மார்க்கெட் ஆட்டம் காணும் நிலையில் இருக்கிறதாம்.
நடிகை பட வாய்ப்புக்காக அடிக்கடி சில பார்ட்டிகளில் பங்கேற்பதுண்டு. ஆனால் அதில் அவர் நாயகர்களை வேறு விதமாக கவனித்ததாக ஒரு செய்தி பரவியது.
திடீரென சரிந்த மார்க்கெட்
அதற்காக அவர் கணிசமாக ஒரு அமௌன்ட் பார்த்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அது அத்தனையும் வதந்தி தான். இருந்தாலும் அதுவே இப்போது நடிகைக்கு ஆப்பாக வந்து விட்டதாம்.
இதை கேள்விப்பட்ட சில நடிகர்கள் நடிகையை தங்கள் படத்தில் நடிக்க வைக்க தயங்குகிறார்களாம். அதேபோல் மூன்று எழுத்து நடிகர் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பும் கைவிட்டுப் போகும் நிலையில் இருக்கிறதாம்.
இதனால் நடிகை இப்போது செம அப்செட். பேசாமல் அக்கட தேசம் சென்று விடலாமா என்று கூட நடிகை ஆலோசனை செய்து வருவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.