வேண்டவே வேண்டாம் என ஒதுக்கிய கவுண்டமணி.. பயப்படாமல் எடுத்த முடிவு

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு முன் உதாரணமாக இருப்பவர் கவுண்டமணி. ஆரம்பத்தில் இவருடைய வசனங்களுக்கு மிகப் பெரிய எதிர்ப்புகள் கிளம்பியது. ஏனென்றால் யாரையும் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசுவது போல தான் இவரது காமெடிகள் இருக்கும் ஆனால் காலப்போக்கில் ரசிகர்களுக்கு பிடிக்க, அதுவே இவருக்கு சாதகமாக அமைந்தது.

அதன் பிறகு தொடர்ந்து பல இயக்குனர்களும் கவுண்டமணி வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டனர். கவுண்டமணி பொருத்தவரை யாருக்கும் பயப்படாமல் தனக்கு மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அதுமட்டுமில்லாமல் சில விஷயங்களை நாசுக்காகவும் சொல்லிவிடுவார்.

ஆனால் கவுண்டமணி சினிமாவை தாண்டி மற்ற துறைகளில் எந்த ஒரு செயலும் செய்ததில்லை அதாவது மற்ற நடிகர்களை போல விளம்பர படங்களில் இதுவரை நடித்தது கிடையாது. சினிமாவின் புகழில் இருந்தபோது கவுண்டமணிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அப்போது பல ரசிகர்கள் கவுண்டமணியை வைத்து ரசிகர் மன்றத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தனர்.

இதனை அறிந்த கவுண்டமணி சினிமா என்னுடைய தொழில் அதை நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் தனக்கு எந்த ஒரு ரசிகர் மன்றம் தேவை இல்லை ரசிகர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே போதும் எனக்கூறி உருவாக இருந்த ரசிகர் மன்றத்தை மறுத்தார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் கவுண்டமணிக்கு முன்பு இருந்தது போல பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு தருவதில்லை அதற்கு காரணம் இவருடைய படங்கள் எதுவுமே முன்புபோல் காமெடிகள் வரவேற்பு பெறுவதில்லை. இதனால் கவுண்டமணி தற்போது சினிமாவை விட்டு விலகி உள்ளார்.

இருந்தாலும் கவுண்டமணியை வைத்து படம் இயக்குவதற்கு தற்போதும் பல இயக்குனர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால் கவுண்டமணி படத்தின் கதையையும் தனக்கான கதாபாத்திரத்தையும் தெரிந்து விட்டு அது இவருக்கு பிடித்தால் மட்டுமே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். மேலும் கூடிய விரைவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -