Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

விஜய் சினிமாவை விட்டு விலகினால் எங்களுக்கு நஷ்டம் இல்லை.. பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

விஜய் சினிமாவை விட்டு விலகினால் எங்களுக்கு நஷ்டம் இல்லை.. பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

தளபதி, சினிமாவை விட்டு விலகினால் என்ன நடக்கும் என்பதை வெளிப்படையாக பேசிய பிரபலம்.

Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி 68 படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது.

இந்தப் படம் தான் விஜய்யின் கடைசி படம் என்றும், இந்த படத்திற்கு பிறகு மூன்று வருடம் அரசியலில் தளபதி தீவிரமாக இறங்கி செயல்பட போவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தமிழ் சினிமாவிற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுமா? என திரைப்பட உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இடம் செய்தியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர் ஷாக்கிங் ரிப்போர்ட்டை கொடுத்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது, மார்க்கெட்டில் பீக்கில் இருக்கும் விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் கோலிவுட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விஜய் அரசியலுக்கு சென்றால் அவருடைய படங்கள் வராது என்பதால் தமிழ் சினிமாவிற்கு எந்த இழப்பும் நேர்ந்திடாது. அவர் இல்லை என்றால் வேறொரு நடிகர் உருவெடுப்பார்

முன்பு தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா இருவரும் களத்தில் போட்டி போட்டனர். அவர்களுக்குப் பின் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் வெளியானது. பின்பு கமல், ரஜினி இருவரும் திரையில் மோதிக்கொண்டனர். இப்போது விஜய், அஜித் என ஒவ்வொரு காலகட்டத்திலும் புதுப்புது நடிகர்கள் உருவாகத்தான் போகிறார்கள். ஆகையால் ஒருவர் சினிமாவை விட்டு போகப் போகிறார் என்றால் உடனே சினிமா அழிந்து போவதில்லை.

விஜய் அரசியலுக்கு செல்வதே தற்போது யூகிக்கப்பட்ட விஷயம் ஒன்றுதானே தவிர, அதை அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இன்னும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அதை அவர் அறிவித்து, அரசியலுக்கு சென்றாலும் இதில் யாரும் கருத்து சொல்ல முடியாது. இது அவருடைய தனிப்பட்ட விஷயம். அவர் சினிமாவை விட்டு சென்றால், இன்னும் இளம் நடிகர்கள் வர தான் போகிறார்கள். சினிமாவிற்கு எந்த பங்கமும் ஏற்படாது.

ஆனால் பாக்ஸ் ஆபிஸில் தற்போது உச்ச நாயகனாக இருக்கும் விஜய்யின் படங்கள் இனி திரையரங்கில் வராது என்றால் அது தியேட்டர்களுக்கு இழப்புதான். இருந்தாலும் அதை வேறு பிற நடிகர்களின் படங்களை வைத்து சமாளித்து விடுவோம் என்று சமீபத்திய பேட்டியில் திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.