செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

மாறனை கொலை செய்யும் அளவிற்கு துணிந்த கண்மணி.. வீராவுக்காக உயிரை கையில் பிடித்து வந்து தாலி கட்டிய புருசன்

Veera Serial: ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வீரா சீரியலில், கண்மணி போட்ட பிளான் என்னவென்றால் மாறன் முகூர்த்த நேரத்தில் வராமல் தடுக்க வேண்டும் என்பதுதான். ஏனென்றால் கண்மணியை பொறுத்தவரை கட்டின புருஷன் ராகவனுடன் சேர்ந்து வாழக்கூடாது. அதே மாதிரி வீராவும், மாறன் கூட வாழ கூடாது என்ற ஒரு எண்ணம். அதனால் இந்த தாலி பெருக்கு பங்க்ஷனில் ஏதாவது பிரச்சனை பண்ணி பங்க்ஷன் நடத்த விடாமல் தடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார்.

அதன்படி ஃபங்க்ஷனுக்கு கிளம்பிய மாறனுக்கு போன் பண்ணி தங்கச்சி பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தவிப்பது போல் மாறனை திசை திருப்பி விட்டார். மாறனும் அதை நம்பி தங்கச்சியை தேடும் அளவிற்கு தெருத்தெருவாக தேடி அலைகிறார். இது எதுவும் தெரியாத வீரா மற்றும் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கோவிலுக்கு போய்விட்டு ஃபங்ஷனுக்கு தேவையான விஷயங்களை செய்து வருகிறார்கள்.

ஆனால் அங்கே போய் சின்ன சின்ன விஷயங்கள் தவறாக நடக்கும் அளவிற்கு கண்மணி இருப்பவர்கள் அனைவரையும் குழப்புகிறார். பிறகு மாறன், தங்கச்சி எதுவும் போன் பண்ண வில்லை பாதுகாப்பாக தான் இருக்கிறார் என்று தெரிந்து கோவிலுக்கு திரும்பும் நிலையில் கண்மணி அடியாட்களை அனுப்பி கொஞ்சம் கொஞ்சமாக மாறனுக்கு பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார்.

கடைசியில் அந்த பிரச்சினை எல்லாம் சமாளித்து வரும் நேரத்தில் கொலை பண்ணும் அளவிற்கு மாறனை கத்தியால் குத்தி விடுகிறார்கள். அதே மாதிரி கோவிலில் காத்துக் கொண்டிருக்கும் பொழுது வீராவிடம், கண்மணி ராகவனும் வேண்டாம் மாறனும் வேண்டாம். அவங்களை பழி வாங்குவதற்காக தான் நான் இந்த குடும்பத்தில் இருக்கிறேன். தேவையில்லாமல் என்னுடன் மோதி உன்னுடைய வாழ்க்கையும் நீ கெடுத்துக்காத.

இந்த மாறனை விட்டு நீ போய்விடு என்று எச்சரிக்கை கொடுக்கிறார். இதைக் கேட்ட வீரா, அப்படி என்றால் நீ தான் மாறனை இங்கே வரவிடாமல் தடுத்துஇருக்கியா என்று கேட்கிறார். உடனே கண்மணி இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதற்கு ஏற்ப ஒன்றுமே தெரியாது போல் நடித்து விட்டார். இதனை தொடர்ந்து மாறன் எப்படியாவது வீரா கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று கத்திக்குத்துடன் கோவிலுக்கு வந்து விடுகிறார்.

அதே மாதிரி தன்னை கத்தியால் குத்தி இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்தக் கூடாது என்பதற்காக காயத்தை மறைத்துக் கொண்டு சரியான நேரத்தில் வீரா கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். ஆனால் தாலி கட்ட முடித்த அடுத்த நொடியில் மாறன் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறார். பிறகு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து மாறனை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகிறார்கள்.

எப்படியும் மாறனுக்கு எதுவும் ஆகாமல் பிழைத்து விடுவார். ஆனால் இந்த கண்மணி, மாறனை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டது ரொம்பவே கொடுமையாக இருக்கிறது. இதற்கு பின்னணியில் இருப்பது கண்மணி தான் என்று கூடிய சீக்கிரத்தில் வீரா கண்டுபிடித்தால் இன்னும் நாடகம் சூடு பிடித்து விடும்.

- Advertisement -spot_img

Trending News