ரஜினிக்கு தெரிஞ்சே தான் எனக்கும், மீனாவுக்கும் அந்த விஷயம் நடந்துச்சு.. பகிர் கிளப்பிய குஷ்புவின் பேட்டி

Rajinikanth: நடிகை குஷ்பூ எப்போதுமே மனதில் பட்டதை அப்படியே பேசக்கூடியவர். அதனால் மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள், இதை சொல்லக்கூடாது என்ற பாரபட்சம் எல்லாம் அவருக்கு கிடையாது. இப்போது முக்கிய கட்சியின் உறுப்பினராக இருக்கும் குஷ்பு அதிகமாக பேட்டிகள் கொடுக்க தொடங்கியிருக்கிறார்.

அப்படி அவர் கொடுத்த பேட்டி ஒன்று இப்போது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நடிகை குஷ்புவாக இருக்கட்டும், மீனாவாக இருக்கட்டும் நிறைய படங்கள் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள்.

அதிலும் மீனா தன்னுடைய அதிர்ஷ்ட ஹீரோயின் என ரஜினியின் பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட தன்னுடைய ஹீரோயின்களுக்கு நடந்த அநீதியை கூட அவர் தட்டிக் கேட்கவில்லையாம். பல வருடங்கள் கழித்து மீனா மற்றும் குஷ்பூ ரஜினி உடன் இணைந்து அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார்கள்.

பகிர் கிளப்பிய குஷ்புவின் பேட்டி

இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. ஆனால் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாததால் பெரிய தோல்வியை அடைந்தது. இந்த படத்தின் தோல்விக்கான காரணம் பற்றி குஷ்பூ மனம் திறந்து சமீபத்திய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

அதாவது சிறுத்தை சிவா முதலில் மீனா மற்றும் குஷ்புவிடம் கதை சொல்லும்போது இந்த படத்தில் ரஜினிக்கு கதாநாயகி கிடையாது என்று சொல்லி இருக்கிறார். நீங்கள் இருவரும் முறைப்பெண்கள், அவர் மீது ஆசைப்பட்டு அது நடக்காமல் போய்விட்டது.

அதன் பின்னர் அவருடைய தங்கை காணாமல் போன பெண் நீங்களும் ரஜினியுடன் சேர்ந்து தேடுவது போல் கதை என்று சொல்லி இருக்கிறார். இரண்டு பேருக்குமே இதில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார். திடீரென இந்த கதைக்குள் நயன்தாராவை சேர்த்திருக்கிறது பட குழு.

அதன் பின்னர் குஷ்பூ மற்றும் மீனா இருவருக்குமே சாதாரண கேரக்டர் போல் கதை எழுதப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் மீனா மற்றும் குஷ்பூ இப்படி கதை மாறியதை பற்றி பேசி இருக்கிறார்கள். ஆனால் ரஜினிக்காக நடித்துக் கொடுத்துவிட்டு போவோம் என முடிவெடுத்து நடித்திருக்கிறார்கள். இதுவரை அந்த படத்தில் ஏன் நடித்தோம் என வருந்துவதாகவும் குஷ்பூ சொல்லி இருக்கிறார்.

Next Story

- Advertisement -