Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

உச்சி குளிர்ந்த உதயநிதி.. விஜய்-யை நேரடியாக தாக்கிய மா.சுப்பிரமணியம்

உச்சி குளிர்ந்த உதயநிதி.. விஜய்-யை நேரடியாக தாக்கிய மா.சுப்பிரமணியம்

தமிழக அரசியலில் தற்போது தவெக தலைவர் விஜய் வலுவான முன்னேற்றத்தை கண்டு வருகிறார். அண்மையில் துவங்கிய அவரது அரசியல் பயணம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் நடுவில், திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறிய ஒரு கருத்து தற்போது […]

தமிழக அரசியலில் தற்போது தவெக தலைவர் விஜய் வலுவான முன்னேற்றத்தை கண்டு வருகிறார். அண்மையில் துவங்கிய அவரது அரசியல் பயணம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் நடுவில், திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறிய ஒரு கருத்து தற்போது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மா.சுப்பிரமணியம் ஒரு பேட்டியில், “திரையுலகத்தில் உச்சத்தில் இருந்தவர் துணை முதல்வர் உதயநிதி. ஆனால் அவர் இன்று முழுநேர அரசியலில் தன்னை அர்ப்பணித்து உள்ளார்” என்று குறிப்பிட்டார். சாதாரணமாக கேட்டால் உதயநிதியை புகழ்ந்த மாதிரி தான் தோன்றினாலும், அரசியல் வட்டாரத்தில் இது விஜய்யை நேரடியாக குறிவைத்ததாகவே பார்க்கப்படுகிறது.

ஏன் தெரியுமா? விஜய் திரையுலகின் மிகப்பெரிய ஸ்டார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் அரசியலில் அடியெடுத்து வைக்கும் போது, அவருடைய சினிமா பாதையை இன்னும் முழுவதுமாக நிறுத்தவில்லை. அடுத்தடுத்து படங்கள் பண்ணிக் கொண்டே அரசியலில் செயல்படுகிறார்.

அதே போல மாநாடு மேடையில் தமிழ் சினிமாவின் உச்சத்தை விட்டுட்டு உங்களுக்காக அரசியல் குதிக்கிறேன் என்று ஓப்பனாக பேசியிருப்பார். இதைத்தான் திமுக அமைச்சர் சர்க்காஸ்டிக் ஆக சொல்லியிருக்கிறார் என்று பலரும் விமர்சிக்கிறார்கள்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வெட்கப்படாமல் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். “விஜய் தான் மக்கள் மனதில் இருக்கிறார், அவரை வம்புக்கு இழுத்து பேசுறது தேவையா?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் மாறாக, “உதயநிதியை பாராட்டுவதற்காகச் சொன்னதை unnecessarily அரசியல் வட்டாரம் twist பண்ணுகிறது” என்றும் கூறுகிறார்கள்.

அரசியல் பக்கம் பார்த்தால், தவெக – திமுக மோதல் இன்னும் அதிகரித்த நிலையில் தான் இருந்தாலும், இப்படிப்பட்ட உரைகள் எதிர்காலத்தில் தேர்தல் சூழ்நிலையில் பெரிய புயலாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. விஜய் எந்த அளவுக்கு தன்னை அரசியலில் full-time அர்ப்பணிக்கப்போகிறார் என்பது ரசிகர்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் ஆர்வமான கேள்வியாக இருக்கிறது.

இதனால், மா.சுப்பிரமணியத்தின் பேச்சு ஒரு சாதாரண கருத்து அல்ல, தமிழக அரசியலில் தீப்பெட்டி போல் விளங்குகிறது. அடுத்த சில வாரங்களில் இதற்கான அரசியல் பதிலடி வரும் என்பதில் சந்தேகமே இல்லை.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.