புதன்கிழமை, அக்டோபர் 23, 2024

சிங்கப்பெண்ணில் காதலை வெளிப்படுத்திய மகேஷ்.. அன்புவின் அம்மாவிடம் ஆதாரத்துடன் சிக்கிய ஆனந்தி

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
நேற்று முழுக்க ஆனந்தி, அன்புவின் அம்மாவிடம் சிக்கிக் கொள்வாளோ என்ற பதட்டத்தில் எபிசோடு முழுக்க பரபரப்பாக இருந்தது.

அன்புக்கு அவல் உப்புமா செய்து ஆனந்தி பரிமாறிக் கொண்டிருக்கும்போது அன்புவின் அம்மா வந்து விடுகிறார். அவரைப் பார்த்ததும் டக்கென ஆனந்தி டைனிங் டேபிள் அடியில் ஒளிந்து கொள்கிறாள். அன்பு தனக்கு பசித்ததால் தானே அந்த உப்புமாவை தயார் செய்து சாப்பிட்டு கொண்டிருப்பதாக சொல்கிறான்.

அந்த உப்புமாவை சாப்பிட்ட அன்புவின் அம்மாவுக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது.
அதே நேரத்தில் அன்புவுக்கும் காலம் முழுக்க ஆனந்தியின் கையாலேயே சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருப்பதாக மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான்.

ஆதாரத்துடன் சிக்கிய ஆனந்தி

அடுத்த நாள் காலையில் அன்புவின் தங்கச்சி காலண்டரில் தனக்கு பீரியட்ஸ் ஆன தேதியை குறித்துக் கொண்டிருக்கிறாள். இதை கவனித்த ஆனந்திக்கு தனக்கு நாள் தள்ளிப் போனது ஞாபகம் வருகிறது. உடனே தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து இதைப் பற்றி கூறுகிறாள்.

ஆனந்தியின் அம்மா எதற்கும் கவலைப்படாதே கருஞ்சீரகம் கசாயம் காய்த்து குடி என்று சொல்கிறார். உடனே ஆனந்தியும் அன்புவிடம் அந்த கசாயம் வேண்டும் என்று சொல்கிறாள். அன்புவும் கிச்சனுக்கு போய் அந்த கசாயத்தை தயார் செய்து கொண்டு வந்து ஆனந்திக்கு கொடுக்கிறான்.

இதன் மூலம் மீண்டும் ஆனந்தி கர்ப்பமாக இருக்கிறாளோ என்ற சந்தேகத்தை ரசிகர்களிடையே இயக்குனர் ஏற்படுத்தியிருக்கிறார். அன்புவின் சட்டை பேண்டை அணிந்து கொண்டு ஆனந்தி வீட்டை விட்டு வெளியில் செல்வது போலவும் காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆனந்தி அன்புவின் அம்மா கண்டுபிடிக்காமல் வீட்டை விட்டு வெளியில் வந்தது போல் நேற்றே காட்டப்பட்டு விட்டது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அவளுடைய செல்போனை அன்புவின் ரூமிலேயே மறந்து வைத்து விடுகிறாள்.

அன்புவின் ரூமை அவனுடைய அம்மா சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது ஆனந்திக்கு போன் வருவது போல் காட்டப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அன்புவின் முன்னாடியே மகேஷ் ஆனந்தியை தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாகவும் சொல்கிறான்.

இது ஆனந்திக்கு குழப்பத்தையும் அன்புக்கு பெரிய கவலையையும் கொடுக்கிறது. போனை வைத்து ஆனந்தி அன்புவின் ரூமுக்குள் இருப்பதை அவனுடைய அம்மா கண்டுபிடிக்கிறாரா என இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News