Memes : பண்டிகை நாட்களில் தொடர்ச்சியாக விடுமுறை வந்தாலே மீண்டும் பள்ளிக்குப் போக மாணவர்களுக்கு மனம் இருக்காது. இப்படி இருக்கையில் கோடை விடுமுறையில் நீண்ட விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறந்து இருக்கிறது.
ஒரு மாதத்திற்கு மேலாக விடுமுறையை கொண்டாடிவிட்டு இப்போது பள்ளிக்குப் போக மனமில்லாமல் நிறைய மாணவர்கள் சென்றிருக்கின்றனர். அதுவும் அழுது கொண்டே குழந்தைகள் போகும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் பள்ளிகள் திறப்பை குறித்து மீம்ஸ்கள் வெளியாகி ட்ரண்டாகி கொண்டிருக்கிறது. எல்லா லீவையும் அழிங்க, மறுபடியும் முதல்ல இருந்து லீவு விடுங்க என்று கதறும் மாணவன் போன்ற ஒரு மீம்ஸ் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அடுத்ததாக வடிவேலுவை வைத்து அய்யய்யோ பள்ளிக்கூட எந்த பக்கம் இருக்குன்னு தெரியலையே, இந்த பக்கம் தான் மல்லிகை பூ வாசம் அதிகமாக வீசுது இந்த பக்கம் தான் இருக்கு போல. ஐயோ லீஃப் ஃபுல்லா போனை யூஸ் பண்ணி பழகிட்டோம்.

ஸ்கூல் திறந்தாச்சு இனிமே போன் யூஸ் பண்ணாம எப்படி இருக்கும்னு தெரியலையே என கதறுகின்றனர் மாணவர்கள். மே மாதம் சரி நான் போயிட்டு வரேன் என்று சொல்ல மாணவர்கள் என்னது அதுக்குள்ள கிளம்பிட்ட என்று வருத்தப்படுவது போல் மீம்ஸ் அமைந்திருக்கிறது.

மாணவர்கள் ஒருபுறம் கதற அவர்களது அப்பாக்கள் பீல் பண்ணும்படி மீம்ஸ்களும் உருவாகியிருக்கிறது. ஒரு மாசமா பேச்சிலர் வாழ்க்கையில் இருந்த புருஷர்களே அடுத்த வாரம் ஸ்கூல் ரீ ஓபன். பொண்டாட்டி ஊர்ல இருந்து வந்துருவாங்க.

இப்பவே எவிடன்ஸ் எல்லாத்தையும் அழிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கணவர்கள் கதறுகின்றனர். இவ்வாறு வழக்கம் போல இனி பள்ளிகள் திறப்பதால் மாணவர்களின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை.