கங்கனாவுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய நெட்டிசன்கள்.. ராகுலுக்கு வைத்த செக், திருப்பி அடித்த சம்பவம்

Kangana Ranaut: பாலிவுட் சினிமா உலகின் சர்ச்சை நாயகியாக இருப்பவர்தான் கங்கணா. இவர் வாயை திறந்து என்ன பேசினாலும் அது சர்ச்சையில் தான் போய் முடியும். இஷ்டத்துக்கு ட்விட்டரில் பேசி வந்த இவரின் அக்கவுண்ட் அந்த நிறுவனத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.

விவசாயிகள் போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்டவர்களை தீவிரவாதிகள் என கங்கணா பேசி இருந்தார். அதன் பின்னர் குஜராத் விமான நிலையத்தில் அந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவருடைய கண்ணம் பழுத்த விஷயம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.

இவர் பாஜக கட்சியின் எம்பி வேட்பாளராக நிறுத்தப்பட்ட போதே இனி என்னல்லாம் பண்ண போகிறாரோ என மக்கள் யோசித்தார்கள். அவர்கள் யோசித்ததை விட பங்கமான விஷயத்தை செய்துவிட்டார் கங்கணா.

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தில் அவருடைய பேச்சுக்கள் எல்லாமே தீப்பிழம்புகளாக இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்தில் அவர் எடுத்து வைக்கும் விஷயம் மூக்கின் மேல் விரல் வைக்க வைக்கிறது.

ராகுலுக்கு வைத்த செக், திருப்பி அடித்த சம்பவம்

சில நேரங்களில் என்ன பேசுவது என தெரியாமல் பிரதமர் மோடியே திணறிப் போய் உட்கார்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பற்றி பேசுவது தவறு, அவர் போதையில் பேசுகிறாரா என சோதனை செய்து பார்க்க வேண்டும் என கங்கனா நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார்.

இதுவரை இப்படி ஒரு பேச்சை நாடாளுமன்றத்தில் யாரும் பேசி கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போதையில் பேசுகிறார் என அபத்தமானது. இந்த வீடியோ வெளியானதில் இருந்து கங்கணாவுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

அது மட்டும் இல்லாமல் பார் ஒன்றில் கங்கனா கையில் மது கோப்பையுடன் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. நீங்களே மது குடிப்பவர் ஆக இருக்கும் பட்சத்தில் எப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி இந்த விமர்சனத்தை வைக்கலாம் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Trending News

- Advertisement -spot_img