பரிதாபத்தை ஏற்படுத்த தனுஷ் செய்த போராட்டம்.. இதுவரை இல்லாததை இப்ப ஏன் செய்யணும்

குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் தன்னை பரிதாபமான ஒரு நடிகராக காட்டிக் கொண்டார். இதுதான் இப்பொழுது கோடம்பாக்கத்தில் பேசு பொருளாக அடிபட்டு வருகிறது. எவ்வளவோ மேடைகளில் தனுஷ் பேசினாலும் இப்பொழுது இந்த குபேரா பட நிகழ்ச்சியில் ஏன் இப்படி பேச வேண்டும் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

தனுஷ் நடிக்க வந்த புதிதில் பல பேர் கிண்டலுக்கு ஆளானார். ஒல்லி பாச்சான் நடிகர், அப்பா தயவில் வந்த நடிகர் என்றெல்லாம் இவரை கேலி செய்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னை நிரூபித்துக் காட்டி மேலே வந்தார். ரஜினியின் மகளை திருமணம் செய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

அதன் பின்னரும் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. பிளேபாய் நடிகர், ரஜினியின் பெயரை கெடுத்துவிட்டார் என்றெல்லாம் இவர் மீது கம்ப்ளைன்ட் வந்தது. ஒரு கட்டத்தில் இவரது திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்றது. ஆனால் இப்பொழுது வரை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனியாக இருந்தாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறார்கள்.

குபேரா பட ஆடியோ நிகழ்ச்சியில் தனுஷ் இப்படி பேசியதற்கு காரணம் அவர் தமிழ் சினிமாவிற்கு சின்ன பிரேக் கொடுத்து, அடுத்த கட்டமாக பாலிவுட் போகிறார். மேலும் தமிழ் சினிமாவில் தன் மீது போடப்பட்ட பழிகளை அகற்றவும், தன் ரசிகர்கள் மத்தியில் ஒரு நீங்காத இடத்தை ஏற்படுத்த இப்படி ஒரு டிராமா என்கிறார்கள்.

ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தாலும் இன்று தனுஷ் இருக்கும் உயரம் மிகப்பெரியது. போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டை விட பல மடங்கு இடங்களை வளைத்து வீடு கட்டி உள்ளார். அப்படி உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் இப்படி பேசுவது யாருக்கும் பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை.