கெத்தா கம்பேக் கொடுத்த ஸ்ரீ.. என்ன செய்யப் போறாரு லோகேஷ்.?

Lokesh-Shri: சில மாதங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் நடிகர் ஸ்ரீ பற்றி போட்டோ வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு என எல்லோரும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குவிய தொடங்கினர்.

அதில் அவருடைய தொடர் பதிவுகளை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி தான். அதிலிருந்து அவர் மனரீதியாக பாதிப்பில் இருக்கிறார் என்ற பேச்சு கிளம்பியது.

அவருக்காக ரசிகர்கள் குரல் கொடுக்க தொடங்கிய சில நாட்களிலேயே இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து லோகேஷ் அவரைக் காப்பாற்ற வேண்டும் என தொடர் கோரிக்கைகளும் வந்தது.

என்ன செய்யப் போறாரு லோகேஷ்.?

அதன் பலனாக ஸ்ரீ மீட்கப்பட்டு தற்போது மீண்டும் கெத்தா திரும்பி வந்துள்ளார். நேற்றைய தினம் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தான் எழுதி இருக்கும் ஆங்கில நாவல் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டும் இன்றி அவருடைய தோற்றமும் புது பொலிவுடன் இருந்தது. அதை பார்த்த ரசிகர்களுக்கு பேரானந்தம். எப்படியோ அவர் மீண்டு வந்து விட்டார் அதுவே எங்களுக்கு சந்தோஷம்தான்.

ஆனால் லோகேஷ் இனி என்ன செய்யப் போகிறார் என கமெண்ட் பாக்ஸில் கேள்வி எழுப்பி வருகின்றனர். உண்மையில் லோகேஷ் ஸ்ரீ மீண்டும் பழைய மாதிரி மாற வேண்டும் என்ற உண்மையான அக்கறையில் தான் இருக்கிறார்.

அதனாலேயே துரிதமாக அவரை கண்டுபிடிக்க முடிந்தது. அப்படி இருக்கும்போது நிச்சயம் அவர் தன் ஹீரோவுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும்.

அதற்கு ஸ்ரீ முழு மனதோடு சம்மதிக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் விரைவில் லோகேஷ் படத்தில் இவரை எதிர்பார்க்கலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.