வெங்கட் பிரபு கோட் படத்திற்கு பிறகு எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் பண்ணுவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில் அதுவும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. சமீபத்தில் அடிக்கடி அவர் ஸ்ரீலங்கா சென்று வருகிறாராம்.
அடுத்த பட கதைகளின் டிஸ்கசன் ஸ்ரீலங்காவில் தான் பெரும்பாலும் நடத்துகிறாராம். இப்படி சமீப காலமாக வெளியில் தலை காட்டாமல் இருந்த வெங்கட் பிரபுவுக்கு மீண்டும் சிவகார்த்திகேயன் இடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அடுத்து அவர் சிவகார்த்திகேயன் படம் பண்ணும் வேலையில் இறங்கி விட்டார்.
சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருந்த பராசக்தி படம் இப்பொழுது பிரச்சனையில் இருக்கிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் அமலாக்கத்துறையால் சுற்றி வளைக்கப்பட்டதால் பராசக்தி படத்தின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கடுப்பான சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவை அழைத்து அடுத்த படத்தை ரெடி பண்ணுமாறு கூறிவிட்டாராம். அவரும் ஸ்ரீலங்காவில் தான் இருக்கிறார். வெங்கட் பிரபு அங்கே ஒரு ரெஸ்டோ பார் ஆரம்பிக்கப் போகிறாராம். இவர் அடிக்கடி சென்று வரும் அந்த பார் விலைக்கு வந்ததால் அதை இவர் வாங்கும் ஐடியாவில் இருக்கிறார்.
வெங்கட் பிரபு பெரும்பாலும் சென்னையில் ரெஸ்டோ பாரில் வைத்துதான் பல முக்கியமான முடிவுகளை எடுப்பாராம். சிவகார்த்திகேயனுடன் படம் டிஸ்கஷன் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பாரில் தான் நடைபெற்றுள்ளது. அவருக்கு இருக்கும் நட்பு வட்டாரத்துக்கு இந்த பார் மூலம் கல்லா கட்டிவிடலாம்.