வடசென்னை-2 NOC சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்.. ரஜினி பாணியில் தனுஷ்!

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வடசென்னை பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதில் வரும் கதாபாத்திரங்களை வைத்து மீண்டும் தானு தயாரிப்பில் சிம்புவுடன் கூட்டணி போடப் போவதாக வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.

இதற்கான ப்ரோமோ வீடியோ மற்றும் டைட்டில் வீடியோக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தனுஷ் NOC கொடுப்பதற்கு 20 கோடி பணம் கேட்பதாக செய்திகள் பரவியது. இதனை வெற்றிமாறன் முற்றிலும் மறுத்துள்ளார். அதாவது தனுஷ் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அதில் வரும் கதாபாத்திரங்களை பயன்படுத்தினால் கண்டிப்பாக NOC வாங்க வேண்டும்.

இதனால் தனுஷிடம் நேரடியாக சிம்புவை வைத்து வடசென்னை படத்தில் வரும் கதாபாத்திரங்களை பயன்படுத்தி ஒரு கதை எழுதி இருக்கிறேன் அதை பண்ணலாமா என்று கேட்டேன். வடசென்னை கதாபாத்திரங்கள் இல்லாமல் மற்றும் ஒரு கதையை நான் வைத்துள்ளேன்.

இதில் எதைத் தேர்வு செய்வது என்பதை நீங்களே கூறுங்கள் என்று தனுஷிடம் வெற்றிமாறன் கேட்டுள்ளார். தனுஷ் இதற்கு உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணுங்க நான் NOC தரேன்னு கூறிவிட்டார். இதற்காக நீங்க பத்து பைசா எனக்கு கொடுக்கத் தேவையில்லை என்பதையும் தெளிவாக கூறிவிட்டாராம்.

இதனை வெற்றிமாறன் வீடியோ ஒன்று வெளியிட்டு தெளிவுபடுத்தி விட்டார். இதனால் சிம்புக்காக தனுஷ் இறங்கி வந்து NOC கொடுக்க முன்வந்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் தனுஷை இன்னும் ஒரு படி மேல் கொண்டு போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.

பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான் என்பது போன்று சக நடிகர்களை மதித்து அவர்களையும் வளர்த்து விடும் பக்குவமான ஒரு சூழ்நிலையை உருவாக்கி விட்டார் தனுஷ். இதனால் தனுஷை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம், பேச வேண்டாம் என்று வெற்றிமாறன் அந்த வீடியோவில் தெளிவுபடுத்தி உள்ளார்.

ரஜினியும் இதே போல சக நடிகர்களை மதித்து விட்டு கொடுத்து பல இடங்களில் கைப்பிடித்து தூக்கி விட்டுள்ளார். அதே பாணியை தற்போது தனுஷ் பாலோ செய்வதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பெருமையாக பேசி வருகின்றனர்.