Gossip: பழசை எல்லாம் கிளறி குளிர் காயும் பிரபலம்.. பணத்தை கொடுத்து வாயை அடைக்க சொன்ன நடிகை

Gossip: கடந்த சில நாட்களாகவே இசை பிரபலம் கிளப்பி வரும் புயல் தான் சூறாவளியாக சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. இதில் தொக்காக மாட்டியது அந்த எவர்கிரீன் நடிகை தான்.

இடையில் மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்ற நிலையில் இப்போது தான் அவர் நம்பர் ஒன் இடத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இசை பிரபலம் பழசை எல்லாம் கிளறி குளிர் காய்ந்து வருகிறார்.

இதனால் அந்த நடிகையின் மார்க்கெட் குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமல்லாமல் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நொந்து போயிருக்கிறார்.

இதற்கெல்லாம் காரணமான அந்த இசை பிரபலத்தை உடனே ஆப் செய்ய வேண்டும் என ஒரு கூட்டமே இப்போது வேலை பார்த்து வருகிறது. மேலும் எவர்கிரீன் நடிகையும் முன்னணி ஹீரோவுக்கு போன் போட்டு பேசி இருக்கிறாராம்.

அவளுக்கு பணம் தான் வேண்டுமென்றால் அதை கொடுத்து வாயை அடைங்க என கடும் கோபத்தோடு பேசி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. அதனால் விரைவில் இந்த விவகாரத்தில் முக்கிய ட்விஸ்ட் ஏற்படலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.

Next Story

- Advertisement -