சினிமா செய்திகள்

படுக்கையிலேயே உச்சா போன ஆர்மி நடிகை.. பெரிய முதலாளி நிகழ்ச்சியில் நடந்த கூத்து

By · 10 நவ் 2023 · Updated 07 மார்ச் 2026
Gossip news

இப்போது சோசியல் மீடியாவில் அந்த பெரிய நிகழ்ச்சியை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. உச்சநடிகரின் தீர்ப்பு தவறு என ஆளாளுக்கு கருத்துக்களை கூறி அதிர வைத்து வருகின்றனர். இதில் முன்னாள் போட்டியாளர்களும் ஒன்று கூடி நியாயம் கேட்டு வருகின்றனர்.

இப்படி பயங்கர அலப்பறையாக இருக்கும் அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் நடந்த சம்பவம் ஒன்று இப்போது கசிந்துள்ளது. அதாவது தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய நடிகை ஒருவர் அந்த வீட்டில் செய்த அலப்பறை கொஞ்சம் நெஞ்சம் கிடையாதாம்.

சமீபகாலமாக நடிகையின் பல அந்தரங்க விஷயம் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதில் ஆண் நண்பர்களுடன் அவர் கூத்தடிப்பதும், குடிபோதைக்கு அடிமையாக இருப்பதும் கடும் அதிர்ச்சியை கிளப்பி இருந்தது. இந்த சூழலில் அவர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் ஒருமுறை படுக்கையிலேயே உச்சா போய் அசிங்கம் செய்து விட்டாராம்.

விதிமுறைப்படி நிகழ்ச்சியை நடத்தும் அந்த டீம் இதனால் அதிர்ந்து போய் இருக்கின்றனர். அதன் பிறகு விளையாட்டில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாம். அது மட்டுமல்லாமல் நடிகை வீட்டில் இருப்பவர்களிடம் கூட ஏதாவது ஒரு பிரச்சனை செய்து கொண்டே இருப்பாராம்.

அதனாலேயே அந்த வீட்டில் அவரை பலரும் ஒதுக்கி வைத்திருக்கின்றனர். ஆனால் இந்த விவகாரம் வெளியில் வரவில்லை. ஏனென்றால் நடிகைக்கு ஆடியன்ஸ் ஆதரவு அதிகமாக இருந்தது. அதன் காரணமாகவே அவரை காப்பாற்ற சேனலும் சில நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இருந்தாலும் இந்த ஆர்மி நடிகை நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.