Vadivelu: ஒரு ஊர் மக்களே எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணும் அளவுக்கு ஏழரை இழுத்து வைத்திருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு.
ஒரு காலத்தில் வடிவேலு முகத்தை பார்த்தே வயிறு குலுங்க சிரித்த மக்கள் தான் அதிகம். ஆனால் இப்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை வடிவேலுவுக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை தான்.
ஏற்கனவே சினிமாவில் சக கலைஞர்களுடன் ஏகப்பட்ட பஞ்சாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
பஞ்சாயத்தை கூட்டி வச்சிருக்கும் மாமன்னன்
இந்த நிலையில் ஒரு ஊர் மக்களே எதிர்த்து ஆர்ப்பாட்டம் பண்ணும் அளவிற்கு இராமநாதபுரத்தில் பிரச்சனை செய்து வைத்திருக்கிறார்.
ராமநாதபுரத்தில் காட்டு பரமக்குடி ஊரில் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் இருக்கிறது. இந்த கோவில் நடிகர் வடிவேலுவுக்கு குலதெய்வ கோவில்.
வீட்டில் தன்னுடைய சொந்தக்காரர் ஒருவரை கோவிலின் அறங்காவலராக நியமித்து வைத்திருக்கிறார். தற்போது அந்த அறங்காவலர் கோவில்லையே ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறார் போல.
வடிவேலு தான் அவரை நியமித்தார் என்பதால் அவருக்கு எதிராக அந்த ஊர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே வடிவேல் தொட்ட இடம் எல்லாம் கன்னி வெடியாக வெடித்து சிதறிக் கொண்டிருக்கிறது. இதில் பொதுமக்களிடமும் தேவையில்லாத பஞ்சாயத்தை கூட்டி வைத்திருக்கிறார்.