அப்பாவுக்காக வேண்டிக் கொள்ளுங்கள், வீடியோ வெளியிட்ட மகள் .. சீரியல் நடிகர் நேத்ரனுக்கு இப்படி ஒரு நோயா?

Serial actor Nethran: அப்பாவுக்காக வேண்டிக் கொள்ளுங்கள், அபிநயா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டிருந்த பதிவு இது. சின்னத்திரை நடிகர் நேத்ரன் கடந்த 25 வருடங்களாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய காதல் மனைவி தீபா நேத்ரன் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியலில் மகேஷின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களுடைய மகள் அபிநயா விஜய் டிவியின் பாய்ஸ் vs கேர்ள்ஸ் என்னும் பிரபலமான நிகழ்ச்சியில் நடனம் ஆடினார். அது மட்டுமில்லாமல் நேத்திரனுடன் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியிலும் பங்கெடுத்துக் கொண்டார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் சீரியல்களில் நடித்தார்.

தற்போது கலைஞர் சீரியலில் ஒளிபரப்பான ரஞ்சிதமே சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையில் திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். இதற்கான காரணம் தற்போது தான் தெரிய வந்திருக்கிறது. நேத்திரனுக்கு புற்றுநோய் உறுதியாகி இருக்கிறது.

அதற்கான ஆப்ரேஷனும் நடந்து முடிந்திருக்கிறது. கல்லீரலில் ஏதாவது டேமேஜ் நடந்து இருக்கலாம் என தற்போது அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருக்கிறார்களாம். பல நாட்களாக நான் இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நினைத்தேன்.

ஆனால் இப்போது பேசி ஆக வேண்டும். அப்பாவுக்காக வேண்டிக் கொள்ளுங்கள், உங்களுடைய பிரார்த்தனை எங்களுக்கு முக்கியம் என அபிநயா சொல்லியிருக்கிறார்.

Next Story

- Advertisement -