சனிக்கிழமை, மார்ச் 15, 2025

பத்து வருடமாக காத்திருக்கும் சூர்யா ஃபேன்ஸ்.. இந்த வருடமாவது கிடைக்குமா விடிவுகாலம்

Suriya: ஒவ்வொரு வருடமும் டாப் நடிகர்களின் படங்கள் வெளியானால் தான் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள். அவ்வாறு வெளியாகும் படங்கள் வெற்றி அடைந்தால் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

ஆனால் பத்து வருடமாக சூர்யா ஃபேன்ஸ் அவரின் தியேட்டர் வெற்றிக்காக காத்திருக்கின்றனர். 2014 ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் அஞ்சான் படம் வெளியானது. இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக வெளியான மாஸ் படத்திற்கும் அதே கதி தான்.

அதன் பின்பு சயின்ஸ் பிக்சன் படமாக வெளியானது 24. இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் 3 படமும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

10 வருடமாக தியேட்டரில் வெற்றி கொடுக்காத சூர்யா

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் எதிர்பாராத அளவு தோல்வியை தழுவியது. செல்வராகவன் உடன் கூட்டணி போட்டு நடித்த என்ஜிகே படமும் போகவில்லை.

அதன் பிறகு கே வி ஆனந்த உடன் சூர்யா இணைந்த காப்பான் படம் நடுநிலையான விமர்சனத்தை பெற்றது. இதை அடுத்து சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் ஓடிடியில் வெளியானது.

இந்த இரண்டு படங்களுமே பெரிய அளவில் ஹிட் ஆகி பேசப்பட்டாலும் தியேட்டரில் வெளியாகாதது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட முடியவில்லை. அதற்கு அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது.

இதுவும் ரசிகர்களிடம் செல்லுபடி ஆகாத நிலையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான படம் தான் கங்குவா. இதை சூர்யா பெரிதும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் அந்த படமும் பெரிய நஷ்டத்தை கொடுத்தது. இந்த வருடமாவது சூர்யா கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம், அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45, கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ ஆகிய படங்கள் சூர்யாவின் கைவசம் இருக்கிறது.

Trending News