ஒரு வாரமா உசுரை வாங்கிய காற்றுக்கென்ன வேலி.. நடுரோட்டில் வெண்ணிலாவை கத்தி கதறவிட்ட விஜய் டிவி

Kaatrukkenna-Veli-vijay-tv

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கல்லூரியில் ஆசிரியராக இருக்கும் சூர்யா, அவரிடம் படிக்கும் வெண்ணிலாவை காதலிக்கிறார். சிறுவயதிலேயே சூர்யா அம்மாவை பிரிந்து, பெரியம்மா அரவணைப்பில் வளர்கிறார். அதேபோல் படிப்பிற்கு தடையாக இருக்கும் குடும்பத்தில் இருந்து ஓடிவந்து சூர்யாவின் அம்மாவின் உறுதுணையுடன் கல்லூரிப்படிப்பை வெண்ணிலா படித்துக் கொண்டிருக்கிறார். இன்னிலையில் காற்றுக்கென்ன வேலி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது. சூர்யா ஏற்கனவே வெண்ணிலாவிடம் தனது காதலை சொல்லிவிட்டார். ஆனால் வெண்ணிலாவும் சூர்யாவை விரும்புவதை மறைத்துக்கொண்டு, … Read more

அண்ணாச்சியை வச்சி நம்மளும் சம்பாதிப்போம்.. காசுக்காக விஜய் டிவி செய்யும் வேலை

vijaytv-annachi-arul

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரான அண்ணாச்சி சரவணன் அருள், இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்து, தனது முதல் படத்திலேயே கமர்ஷியல் ரீதியான வெற்றியை பெற்றுள்ள நிலையில், அவரை வைத்து விஜய் டிவி பெரிய பிளான் போட்டிருக்கிறது. அண்ணாச்சி வைத்து விஜய் டிவி ஒரு படத்தை எடுக்க பார்க்கிறார்கள். அவருடைய பிராண்ட் நேம் மூலம் பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இருக்கிறது விஜய் டிவி. இதற்காக சரவணன் அண்ணாச்சிக்கு என்றே ஒரு கதையையும் உருவாக்கியிருக்கிறார்கள். … Read more

பாரதியை காப்பாற்ற முட்டாள்தனமான முடிவெடுத்த சௌந்தர்யா.. ஜோலியை முடிச்சுவிட்ட கண்ணம்மா!

bharathi-kannamma

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் ஆட்டத்தை அடக்க வேண்டும் என்பதற்காக பாரதியின் அம்மா சௌந்தர்யா, வெண்பாவின் அம்மாவிடம் உடனடியாக வெண்பாவிற்கு திருமணத்தை நடத்த வேண்டும் என சொல்கிறார். இதற்கு வெண்பாவின் அம்மாவும் உறுதுணையாக இருப்பதால் உடனே வெண்பாவிற்கும் ரோஹித்திற்கும் நிச்சயதார்த்தத்தை தடபுடலாக ஏற்பாடு செய்கின்றனர். ஒருவேளை நிச்சயதார்த்தத்தில் ஏதாவது தடங்கல் செய்ய நினைத்தால் வெண்பாவை போலீசிடம் ஒப்படைத்து விடுவேன் என சௌந்தர்யா ஏற்கனவே எச்சரித்திருக்கிறார். இருப்பினும் வெண்பாவிற்கு இந்த நிச்சயதார்த்தத்தில் துளிகூட விருப்பம் இல்லாததால், ரோஹித்தின் … Read more

மீனாவிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மூர்த்தி.. 90’s கதையை இப்ப உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

pandiyan-stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இரண்டாவது தம்பி, கதிர் வீட்டை விட்டு வெளியேறி பல கஷ்டங்களுக்கு பிறகு ஹோட்டல் கடை ஆரம்பித்தார். முதல் வியாபாரத்தை முடித்த மூர்த்தி, கையோடு பார்சலையும் வாங்கி வந்து சாப்பிட்டு விட்டு வீட்டில் இரவு சாப்பாடு சாப்பிட முடியாமல் தவித்தார். இரவு உணவிற்கு பிறகு, கொள்ளைப்பக்கம் சென்ற மீனாவின் கண்களில் அந்த பார்சல் மாட்டி கொண்டது. சும்மாவே சின்ன பிரச்சனையை பெரிசாக்கும் மீனா, அந்த பார்சலை பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் தான் போட்டிருப்பார்கள் என்று நினைத்து … Read more

சக்களத்திடம் சரணடைந்த கோபி.. 40 லட்சத்திற்கு புருஷனை விற்ற பாக்யா!

bhakiya-gopi-radhika

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் கோபி, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிந்ததும் மனைவி பாக்யா கோபியை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்குப் பிறகு அவருடன் ஒரே வீட்டில் வாழ முடியாது என முடிவெடுத்து அவரை வீட்டைவிட்டு வெளியேற்றினார். கோபி வெளியே போனதற்குப் பிறகு கோபியின் அம்மா, இனியா, செழியன் என அனைவரும் கோபிக்கு சாதகமாகப் பேசி பாக்யாவை திட்டித் தீர்க்கின்றனர். இதனால் மனமுடைந்த பாக்யா ஒரு மூலையில் முடங்கி … Read more

திருட்டுத்தனமாக சாப்பிட்ட மூர்த்தி.. 3வது பிஸ்னஸ்க்கு அடி போடும் பாண்டியன் ஸ்டோர் மருமகள்

pandiyan-stores

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2-வது தம்பி கதிர், முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிறகு அவர் ஹோட்டல் ஒன்றை துவங்கி அதில் முதல் நாள் வியாபாரம் பார்த்திருக்கிறார். முதல் நாளில் எவ்வளவு லாபம் வந்திருக்கிறது என முல்லையும் அக்கா மல்லி, முல்லையை வரவு செலவு கணக்கு பார்க்க சொல்கிறார். அதில் 1000 ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதும் … Read more

உங்க பாசத்துல துக்கம் தொண்டை அடைக்குது.. IPS சந்தியா பரீட்சை எழுதுற இடத்தில் நடந்த சில்மிஷம்

raja-rani-2

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனடவுடன் இருக்கும் சந்தியா, தற்போது மாமியார் சிவகாமியின் சம்மதத்துடன் பரிச்சை எழுத இருக்கிறார். அவரை பரீட்சை எழுதவிடாமல் செய்வதற்காக கர்ப்பிணியாக இருக்கும் அர்ச்சனா, தனக்கு வயிறு வலிப்பது போல் நாடகமாடுகிறார். இதனால் பதட்டத்தில் அனைவரும் அர்ச்சனாவை கவனிப்பதால் சந்தியா எப்படி தேர்வு அறைக்கு செல்வது என தடுமாறுகிறார். அதன் பிறகு வீட்டிற்கு வரும் சரவணன் சந்தியாவை தனது இருசக்கர வாகனத்தின் மூலம் பத்திரமாக தேர்வு நடக்கும் இடத்திற்கு … Read more

நீ தான் என் கடைசி நம்பிக்கை.. 50 வயதில் கள்ளக்காதலுக்காக சாகத் துணிந்த கோபி

radhika-gopi-bhakiyalaxmi

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்திற்கு பிறகு கோபியுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ முடியாது என அவரை வீட்டை விட்டு வெளியே போக பாக்யா சொல்கிறார். ஆனால் மகள் இனியா மற்றும் கோபியின் அம்மா ஈஸ்வரிக்கு இதில் உடன்பாடில்லை. ‘இந்த வீட்டிற்காக என்னுடைய உழைப்பை கொட்டி இருக்கிறேன். இதற்காக 40 லட்சம் செலவழித்ருக்கிறேன். அதைக் கொடு, நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன்’ என கோபி பாக்யுடன் வம்பு செய்கிறார். உடனே பாக்யாவும் அந்த 40 … Read more

அண்ணாமலை ரேஞ்சுக்கு சவால்விட்ட கதிர், முல்லை.. தலையை விட்டு மாட்டிகொண்ட சக்காளத்தி

விஜய் டிவியில் குடும்ப தொடராக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர். தற்போது கதிரின் ஹோட்டலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒருவருக்கொருவர் தெரியாமல் சென்றுவிட்ட வந்துள்ளனர். ஆனால் கடைசியாக சென்ற மீனா மற்றும் ஐஸ்வர்யா எதர்ச்சையாக பார்த்துக்கொள்கிறார்கள். இந்நிலையில் முல்லை கடையில் முதல் நாள் வசூல் என்ன என்பதை பார்க்கிறார். அப்போது முல்லையின் அக்கா மற்றும் தனத்தின் சக்களத்தியாக என்ட்ரி கொடுத்திருக்கும் மல்லி பிரச்சனையை தூண்டி விடுகிறார். அதாவது கணக்கு வழக்கை முதலில் பார் என முல்லையிடம் கூறுகிறார். … Read more

டிஆர்பி-யில் அசுர பலத்தை காட்ட போட்டிபோடும் 5 சீரியல்கள்.. விஜய் டிவி-யை துரத்தி அடித்த சன் டிவி

vijay-sun-tv-serial trp-list

சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே புது புது கதைகள் கொண்ட சீரியல்களையும், விதவிதமான என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளையும் கொடுத்து விஜய் மற்றும் சன் டிவி சேனல்களுக்கு இடையே டிஆர்பி-யில் கடும் போட்டி நிலவும். அதிலும் தற்போது மிகவும் பிரபலமான டாப் 5 ஃபிக்சன் (fiction) மற்றும் நான்ஃபிக்சன் (non-fiction) பிரபலங்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் ஃபிக்சன் டாப்-5 பிரபலங்களில் இடத்தை எப்பொழுதும் டிஆர்பி-யில் டாப் இடத்தை பிடிக்கும் கயல் சீரியலின் கதாநாயகி பெற்றிருக்கிறார். கயல் … Read more

உலகநாயகன் இடத்தை பிடிக்க போட்டி போடும் 5 நடிகர்கள்.. விஜய் டிவி குறிவைக்கும் பிரபலங்கள்

kamal-vijaytv-bigg-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 5 சீசன்களாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் நிறைய படங்கள் பண்ண போகிறார். இதனால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவது கடினம். இந்நிலையில் அவருக்கு பதிலாக ஐந்து நடிகர்களை விஜய் டிவி குறி வைத்துள்ளது. சிம்பு: கமலஹாசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தபோது பிக்பாஸ் அல்டிமேட் … Read more

துரோகம் செஞ்ச நீ வெளியே போகனுமா.? நா போகனுமா.? அட்ரா சக்க, பாக்யாவை சுத்தலில் விடும் கோபி

baakiyalakshmi-serial

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு வீட்டிற்கு வந்த பாக்யா, பொட்டியை கட்டிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறார் என அனைவரும் அவரை சமாதானப்படுத்தி வீட்டில் இருக்கும்படி வற்புறுத்துகின்றனர். மேலும் கோபி விவாகரத்து ஆன பிறகு இந்த வீட்டில் உனக்கு இடமில்லை என வீட்டை விட்டு வெளியேறி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிப் பாக்யாவை அசிங்க படுத்துகிறார். ஒருகட்டத்தில் அவர் கையில் இருக்கும் பெட்டியை வீட்டைவிட்டு வெளியே எறிந்து நடையைக் கட்டு என கோபி … Read more

ஆள் அடையாளம் தெரியாமல் மாறி போன லாஸ்லியா புகைப்படங்கள்.. அம்மணிக்கு ஜீன்ஸ் கிழிஞ்சு தொங்குது

losliya-23

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. அப்போது கவினை காதலிப்பதாக சொல்லி சில சர்ச்சைகளும் லாஸ்லியா சிக்கியிருந்தார். ஆனாலும் அவருடைய அழகும், தமிழும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் லாஸ்லியா வெள்ளித்திரையில் அறிமுகமானார். மேலும் பிக்பாஸில் தன்னுடைய சக போட்டியாளரான தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். … Read more

அந்த குழந்தை அளவுக்கு கூட உனக்கு அறிவு இல்ல பாரதி.. குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டும் கண்ணம்மா

bharathikannamma

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பத்து வருடங்களாக மனைவியையும் மகளையும் விட்டு பிரிந்து வாழும் டாக்டர் பாரதிக்கு, ஹேமா கண்ணம்மாவின் மகள் என்ற விஷயம் தெரிந்தது. அதுமட்டுமின்றி கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமியும் பாரதிதான் அப்பா என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். இதை பாரதியிடமே லஷ்மி வெளிப்படுத்துகிறார். ஒருவேளை ஹேமாவிடம் லட்சுமி இந்த உண்மையை சொல்லி விடுவார் என்ற பதட்டத்திலும், ஹேமாவை கண்ணம்மா தன்னிடமிருந்து பிரித்து விடுவார் என்ற பயத்திலும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே ஹேமாவை பாரதி வைத்திருக்கிறார். … Read more

கட்டிப்பிடித்து எலும்பை உடைத்த சௌந்தர்யா.. மரண பீதியில் வெண்பா

venba-bharathikannama

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் பத்து வருடங்களாக கணவன் மனைவியான பாரதி-கண்ணம்மா இருவரையும் பிரித்து சதி வேலை செய்த வெண்பாவின் ஆட்டத்தை சௌந்தர்யா அடக்க முடிவெடுத்திருக்கிறார். இதனால் வெண்பாவின் அம்மாவிடம் வெண்பா-ரோஹித் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடத்த சொல்கிறார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வெண்பாவை வெண்பாவின் அம்மா மற்றும் சௌந்தர்யா இருவரும் படு கேவலமாக நடத்துகின்றனர். இந்த நிச்சயதார்த்தத்திற்கு மட்டும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் மறுபடியும் சிறைக்கு சென்று களி தின்ன வைத்துவிடுவேன் என வெண்பாவின் அம்மா … Read more

இந்த ட்விஸ்ட் நம்ம எதிர் பார்க்கவே இல்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் எல்லைமீறிய கோபி

Baakiyalakshmi-gopi-1

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தோழி ராதிகாவுடன் தொடர்பில் இருந்த கோபியின் தகாத உறவு தெரிந்ததும், பாக்யா அந்த துரோகத்தை கொஞ்சம்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்து ஆன கையோடு வீட்டிற்கு வந்த பாக்யா பெட்டி ஒன்றில் துணிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்குகிறார். மகள் இனியா, மாமனார் உட்பட அனைவரும் பாக்யாவை வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என கெஞ்சுகின்றனர். ‘எல்லா தப்பையும் கோபி தான் செய்ததால் அவர் தான் வீட்டை விட்டு … Read more

கமலை வைத்து விளம்பரம் தேடிய விஜய் டிவி.. ரெண்டு வருஷம் ஆச்சு, வாய்ப்பில்லாமல் புலம்பும் பிரபலம்

bigg boss

உலகநாயகன் கமலஹாசன், சொன்ன வாக்கில் உறுதியாக நிற்பவர் என்ற பெயரை எடுத்தவர். ஆனால் அவர் கொடுத்த வாக்கை நம்பி இரண்டு வருஷமாக காத்திருக்கும் பிரபலத்திற்கு தற்போதுவரை விடிவுகாலம் இல்லை. கமல் சொன்னதை நம்பி காத்திருந்தால் வருடங்கள்தான் ஓடியுள்ளது. அதாவது கமலஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கவின், முகின் ராவ், சாண்டி, லாஸ்ஸியா, தர்ஷன், சேரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தனர். … Read more

டாப் 10 சீரியல் நடிகைகளின் மொத்த லிஸ்ட்.. முதலிடம் பிடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்!

pandiyan-stores-bharathikannama

வெள்ளித்திரை கதாநாயகிகளை ரசிப்பது போலவே சின்னத்திரை கதாநாயகிகளையும் ரசிப்பதில் ரசிகர்கள் எவ்வித பாகுபாடும் பார்ப்பதில்லை. அந்த வகையில் சோசியல் மீடியாவில் சின்னத்திரை நடிகைகளை பின் தொடர்வது அவர்கள் பதிவிடும் புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர். எனவே தற்போது 2021ம் ஆண்டிற்கான டாப் 10 சீரியல் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. சன் டிவி தொலைக்காட்சியில் சுந்தரி என்ற சீரியலில் நடித்து வரும் சுந்தரி கதாபாத்திரத்திற்கு 10வது இடம் கிடைத்துள்ளது. கேப்ரியலா என்ற இந்த … Read more

மணமேடையில் அடாவடி செய்த வெண்பா.. தலைகுனிந்த காதலன்

kannamma-venba11

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் இரண்டு குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் பாரதியை 10 வருடங்களாக அவருடைய மனைவியிடம் இருந்து பிரித்து வைத்து, எப்படியாவது திருமணம் செய்து கொள்ளவேண்டும் என படு கேவலமான வேலைகளை வில்லி வெண்பா செய்தாலும், கடைசியில் பாரதி வெண்பாவை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என தெளிவாக சொல்லிவிட்டார். இதனால் வெண்பாவின் அம்மா ரோஹித் என்பவரை மாப்பிள்ளையாக தேர்வு செய்து, அவருடன் நிச்சயதார்த்தம் நடத்த முடிவு செய்கின்றனர். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில், … Read more

பெட்டியை விட்டு எரிந்த பாக்யா.. கோபிக்கு மொத்தமாக ஆப்பு வச்ச குடும்பம்

bhagya-gopi-family

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் 50 வயதில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்கும் பொறுப்பிலிருக்கும் கோபி, கொஞ்சம் கூட குடும்பத்தை பற்றி யோசிக்காமல் கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்வதற்காக, 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்திருக்கிறார். தவறு எல்லாவற்றையும் கோபி செய்துவிட்டு தற்போது கடைசியில் பாக்யாவின் மீது எல்லா பழியையும் தூக்கி போடுவது மட்டுமல்லாமல் விவாகரத்துக்குப் பிறகு வீட்டில் எந்த உரிமையும் இல்லை என அவரை வீட்டை விட்டு துரத்துகிறார் கோபி. விவாகரத்து … Read more

ஓசி சாப்பாட்டுக்கு ஓடோடி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. முட்டி மோதிக் கொள்ளும் மீனா, ஐஸ்வர்யா

meena-ishwarya-pandian-stores

விஜய் டிவியில் கூட்டுக்குடும்பம் மகத்துவத்தை சொல்லும்விதமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் தற்போது கதிர் ஹோட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். அப்போது தன் குடும்பத்தின் வருகைக்காக கதிர் காத்துக்கொண்டிருக்கிறார். முதலாவதாக மூர்த்தி ஹோட்டலுக்கு முன் உள்ள மரத்தடியில் மறைந்து கொண்ட ஒரு குழந்தையிடம் சாப்பாட்டை வாங்கிவரச் சொல்லி பணத்தை கொடுத்து விடுகிறார். முதல் போனியே அண்ணன் கையால் என தெரிந்தவுடன் கதிர் ஆனந்தத்தில் இரண்டு, மூன்று பொட்டலங்களை சேர்த்து வைத்து கொடுத்து விடுகிறார். அடுத்ததாக கண்ணன் … Read more

சூரிய வம்சத்தை மிஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ்.. சரத்குமாருக்கே டஃப் கொடுத்த மூர்த்தி

pandiyan-stores-sarathkumar

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர், புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கி இருக்கிறார். அதற்கான திறப்பு விழாவில் எப்படி கலந்துகொள்வது என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் மூர்த்தி, தனம், ஜீவா உள்ளிட்டோர் முழித்துக் கொண்டிருக்கின்றனர். என்னதான் தம்பி மீது கோபம் இருந்தாலும் புதிதாக தொழிலை துவங்கும் கதிருடன் உறுதுணையாக நிற்க வேண்டுமென அண்ணன் மூர்த்தி விரும்புகிறார். இதற்காக வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கதிர் உடைய கடைக்கு அருகே சென்று, அங்கு … Read more

கலெக்டர் அர்ச்சனாவுக்கு செருப்பு மாட்டிவிடும் சந்தியா.. ஐபிஎஸ் ஆவதற்கு ஆப்பு வைத்த மாமியார்

archana-sandhiya-rajarani2

விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் ஒருவழியாக சந்தியா போலீஸ் ஆகுவதற்கு மாமியார் சிவகாமி சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதன் பிறகு பிரச்சனை இல்லை என அனைவரும் பெரு மூச்சு விட்ட நிலையில், தற்போது புதிதாக சிவகாமியின் மாமியார் ரூபத்தில் பிரச்சனை எழுந்துள்ளது. சந்தியா படித்து போலீஸ் ஆகிவிட்டால் குடும்பத்தில் அர்ச்சனாவிற்கு மதிப்பு மரியாதை இருக்காது என்பதால், அவரும் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என விரும்புகிறார். அதை நினைத்துக் கொண்டே உறங்கச் சென்ற அர்ச்சனாவிற்கு ஒரு … Read more

அப்பா வேணுமா, அம்மா வேணுமா.. இனியா எடுத்த அதிரடி முடிவு

iniya-gopi-bhgakiyalaxmi-serial

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. அதிரடியான திருப்பங்களுடன் அடுத்தடுத்த ட்விஸ்ட் இத்தொடரில் அரங்கேறி வருகிறது. அதாவது பாக்யா கோபிக்கு விவாகரத்து கொடுத்தவுடன் கோபியின் அம்மா, செழியன், இனியா எல்லோரும் பாக்கியாவிடம் வாதாடுகின்றனர். ஆனால் எதுவும் பேசாமல் பாக்கியா மௌனம் சாதித்து வருகிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபி பாக்கியா மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அதாவது இத்தனை நாள் விவாகரத்து செய்ய தான் பாக்கியா காத்துகொண்டு இருந்தாள். தற்போது … Read more

ஏண்டா குழந்தைகளுக்கே தெரிஞ்சிருச்சு இன்னுமாடா சாவ அடிக்கிறீங்க.. கதறவிடும் பாரதி கண்ணம்மா

bharathikannamma

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதிகண்ணம்மா. இதில் பாரதி ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த கதையும் முடிந்துவிடும். அதை மட்டும் செய்ய விடாத இயக்குனர் கதையை ஜவ்வு போல இழுத்து வருகிறார். இதனால் இத்தொடருக்கு எப்போ எண்டு கார்டு போடுவீர்கள் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆரம்பத்தில் லட்சுமிக்கு பாரதி தான் அப்பா என்ற உண்மை தெரிய வந்துள்ளது. ஆனால் ஹேமா தன்னுடைய அம்மா யார் என்ற பாரதியிடம் நச்சரித்தால் … Read more

ஈரமான ரோஜாவே – மனைவிக்காக தீக்குளித்த பார்த்திபன்.. நன்றி கெட்டு கேப்ரில்லா(காவியா)

eramana-rojavey-kavya-cinemapettai

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கலெக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் காவியா அதற்காக பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது, அங்கு தீ விபத்தில் சிக்கிக் கொண்டார். தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து காவியாவின் கணவர் பார்த்திபனும், தீ விபத்தில் மாட்டிக் கொண்ட காவியாவை பத்திரமாக மீட்டார். காவியாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாத நிலையில் பார்த்திபன் மட்டும் உயிருக்குப் போராடி கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார். உடல் முழுவதும் புண்ணான பார்த்திபனுக்கு மனைவி காவியா மருந்து … Read more

கடை திறப்பு விழாவில் அசிங்கப்படும் கதிர்.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் சக்களத்தி

pandiyan-stores-kathir-mullai

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் புதிதாக ஹோட்டல் கடை ஒன்றை துவங்கி அதை இன்று திறக்கின்றனர். அதற்காக அத்தனை ஏற்பாடுகளையும் செய்த கதிர், கடை திறப்பு விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வரும் என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார். ஆனால் முல்லை உடைய அப்பா, அம்மா இருவர் மட்டுமே கடைத் திறப்பு … Read more

செல்வியை வைத்து பாக்யாவை அசிங்கப்படுத்திய கோபி.. குடும்பமே சேர்ந்து ஒத்து ஊதிய கேவலம்

bhagkiyalaxmi-serial

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் விஷயத்தை தெரிந்ததும், அதை தாங்கிக் கொள்ளாத பாக்யா 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த கணவர் கோபியை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்து ஆன கையோடு வீட்டிற்கு வரும் பாக்யாவை வீட்டிற்குள் வரவிடாமல் கோபி தடுக்கிறார். உடனே எழில், அம்மா பாக்யா வீட்டில் ஒன்றும் தங்க வரவில்லை. அவர்களது உடமைகளை எடுத்துக் கொள்ள வந்திருக்கிறார் என்று கோபிக்கு பதிலடி கொடுக்கிறார். பாக்யாவிற்கு சொந்தமான பொருள் இங்கு … Read more

மீண்டும் பாண்டியன் ஸ்டோருக்கு வந்த கதிர்-முல்லை.. பாதை மாறிப் போகும் ஜீவா

pandianstore

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தரும் கட்டாயத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் தற்போது புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளனர். இதற்காக மளிகை பொருள் வாங்குவதற்காக தன்னுடைய அண்ணன் கடையான பாண்டியன் ஸ்டோருக்கு வந்த கதிர், அண்ணி தனம் மூட்டை தூங்குவதை பார்க்கமுடியாமல், அந்த மூட்டைகளை கதிரே தூக்கிப் போடுகிறார். அதன்பிறகு கடைக்குள் வேண்டிய பொருட்களை வாங்கும் கதிரிடம், அண்ணி தனம் புதிதாக தொடங்கியிருக்கும் ஹோட்டல் … Read more

வெண்பா கன்னத்தை பதம் பார்த்த சௌந்தர்யா.. அடிதடியில் இறங்கிய கண்ணம்மா மாமியார்

venpa-serial-cinemapettai-photo

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் கணவன் மனைவியான பாரதி-கண்ணம்மா இருவருக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி 10 வருடங்களாக பிரிந்து வாழ விடாமல் வில்லி வெண்பா வைத்திருக்கிறார். இதற்கிடையில் பாரதியின் மனதை மாற்றி எப்படியாவது அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என வெண்பா நினைத்தாலும், அது மட்டும் நடந்த பாடில்லை. ஒரு கட்டத்தில் வெண்பாவின் அம்மா அமெரிக்காவில் இருந்து அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்திருக்கிறார். ரோகித் என்ற மாப்பிள்ளையும் பார்த்து வைத்திருக்கிறார். … Read more