New Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் அதிக புள்ளிகளை பெற முடிகிறது என்பதால் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இப்பொழுதுதான் மூன்று சேனலிலும் புது சீரியல்கள் ஒளிபரப்பு செய்தார்கள்.
அதற்குள் அடுத்து இன்னும் மூன்று புது சீரியல்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. சன் டிவியில் ஆடுகளம் மற்றும் வினோதினி சீரியலை தொடர்ந்து இலக்கியா சீரியல் மூலம் சன் டிவியில் அறிமுகமான ஹேமா பிந்து நடிப்பில் இன்னொரு புது சீரியல் ஆரம்பமாகப் போகிறது.
இவருடன் சேர்ந்து ஜீவிதா என்பவரும் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். இவர்களுக்கு ஜோடியாக ரஞ்சனி சீரியலில் ஹீரோவாக சீனு கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் என்பவர் இணைந்திருக்கிறார்.
இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவி சேனலிலும் புதுசாக ஒரு சீரியல் வரப்போகிறது. அதாவது மெல்லத் திறந்து பேசு என்ற புத்தம்புது சீரியலை தொடர்ந்து மகாநதி சீரியலின் இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் பிக் பாஸ் மற்றும் செல்லமா சீரியல் மூலம் பிரபலமான அன்சிதா நடிப்பில் புதுசாக ஒரு சீரியல் வரப்போகிறது. இதில் இவருக்கு ஜோடியாக நீ நான் காதல் சீரியலில் அறிமுகமான ராகவன் கதாபாத்திரத்தில் நடித்த பிரேம் என்பவரும் கமிட் ஆகி இருக்கிறார்.
அடுத்ததாக ஜீ தமிழ் சேனலில் இப்பொழுதுதான் அயலி என்ற ஒரு சீரியல் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து வாரிசு என்ற சீரியலும் வரப்போகிறது. இப்படி மூன்று சேனல்களும் போட்டி போட்டு புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு வருகிறார்கள். அதிலும் விஜய் டிவிக்கு அடித்தது சுக்கிர திசை என்று சொல்வதற்கு ஏற்ப அடுத்தடுத்து 2 புது சீரியல்கள் ஒளிபரப்பாக போகிறது.