முத்துவுடன் ஒன்று சேர்ந்த அருணுக்கு கிடைத்த பிரமோஷன்.. மீனாவின் தங்கைக்கு பிறந்த விடிவு காலம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் வாயை திறந்து பேச ஆரம்பித்ததும் இத்தனை நாள் உனக்கு பதிலாக டப்பிங் கொடுத்த ரோகினி சொன்ன எல்லா விஷயமும் நீ சொன்னது தானா என்று விஜயா கேட்கிறார். உடனே மனோஜ், ரோகிணியை பார்த்த நிலையில் ரோகிணி முகத்தில் பயம் தெரிந்தது. அதனால் ரோகிணியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மனோஜ் ஆமாம் என்று விஜயாவிடம் பொய் சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக முத்து, வழக்கம்போல் சவாரியில் கஷ்டமரை இறக்கிவிட்டு வரும்பொழுது அங்கே அருணும் வருகிறார். ஆனால் இரண்டு பேரும் பார்த்த பிறகு ஒருவரை ஒருவர் பேசிக் கொள்ளாமல் போய்விடுகிறார்கள். அப்பொழுது அங்கே ஒரு செயின் திருட்டுப் போய் விடுகிறது. உடனே செயினை பறிகொடுத்த அம்மா கதறிய நிலையில் முத்து, அந்த செயினை திருடிட்டு போன நபரை துரத்தி பிடிக்கப் போகிறார்.

இதைப் பார்த்த டிராபிக் போலீஸ் அருணும், பின்னாடியே போய் அந்த திருட்டு கும்பலை பிடிப்பதற்கு போகிறார். அப்படி போகும் பொழுது அந்த கும்பல் ஒரு வீட்டுக்குள் சென்று அந்த வீட்டுக்குள் இருந்த அம்மா கழுத்தில் கத்தியை வைத்து பயமுறுத்தி பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டார். சத்தத்தைக் கேட்டு முத்து மற்றும் அருணும் அந்த வீட்டிற்குள் சென்று விடுகிறார்கள்.

பிறகு முத்து அருண் ஒன்றாக நின்னு அந்த திருட்டு நபரிடம் பேசுகிறார்கள். ஆனால் அந்த நபர் வெளியே போக சொன்ன நிலையில் முத்து அங்கிருந்த ஒரு பொருளை தூக்கி எரிந்து அங்கு இருக்கும் அம்மாவை காப்பாற்றி விடுகிறார். பிறகு அருண் மற்றும் முத்து இருவரும் சேர்ந்து அந்த நபரை அடிக்கிறார்கள். பிறகு அருண் அந்த நபரை கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விடுகிறார்.

இதனால் அருணுக்கு பிரமோஷன் கிடைக்கிறது, இந்த சந்தோஷத்தை அம்மாவிடம் சொல்லிய நிலையில் அருண் அம்மா, உனக்கு சீதா வேண்டாம். அந்த முத்துவின் அம்மாவை பார்த்து பேசினேன், ரொம்ப ஓவராக பேசி என்னை அவமானப்படுத்தி விட்டார். அதனால் சீதாவை மறந்துவிடு, நான் உனக்கு வேறொரு பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று கரராக சொல்லி விடுகிறார்.

இதனால் பயந்து போன அருண், சீதாவுக்கு போன் பண்ணி ப்ரோமோஷன் கிடைத்த விஷயத்தை சொல்கிறார். அதன் பின் நேரடியாக பார்த்து பேச வேண்டும் என்று கோவிலுக்கு போகிறார். அங்கே மீனாவின் அம்மா, மீனா மற்றும் சீதா இருப்பதால் நடந்த விஷயத்தை அருண் சொல்லி எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கலாம் என்று முயற்சி எடுக்கிறார்.

அத்துடன் அருண், அந்த திருட்டு கும்பலை பிடித்து உதவி செய்ததை யோசித்துப் பார்த்து முத்து, அருணும் நல்லவன் தான் என்று முடிவெடுத்து சீதாவின் கல்யாணத்துக்கு சம்மதத்தை கொடுத்து விடுவார். இதற்கிடையில் ரோகினி, மனோஜை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக மகேஷ் என்பவரை சந்தித்து பேசுகிறார். இதை மறைமுகமாக பார்க்கும் மனோஜ் பயப்பட ஆரம்பித்து விட்டார். அதனால் ரோகிணி தான் இனி முக்கியம் என்று விஜயாவை டீலில் விட்டு ரோகினிடம் சமரசம் ஆகி விடுவார்.