அய்யனார் துணை சீரியலில் பிளாஷ் பேக்.. மாற்றாந்தாய் பிள்ளையாக நிற்கும் பல்லவன்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரன் கல்யாண விஷயத்தில் தொடர்ந்து அவமானத்தை சந்தித்து வருகிறார். இதை எல்லாம் சரி செய்யும் விதமாக நம்மால் முடிந்தது ஏதாவது பண்ண வேண்டும் என்று யோசித்த பாண்டியன், வானதி காதலை தெரிவிக்கும் பொழுது உணர்ச்சிவசப்பட்டு எங்க அண்ணனை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்டு விடுகிறார்.

இதனால் கோபமான வானதி, பாண்டியனிடம் சண்டை போட்டு போய் விடுகிறார். அத்துடன் வானதி வீட்டிற்கு வந்து சேரன் நிலா பல்லவன் மற்றும் சோழனிடம் பாண்டியன் சொன்ன விஷயத்தை பற்றி சொல்லி விடுகிறார். இதைக் கேட்டதும் அனைவருக்கும் சிரிப்பு வந்த நிலையில் சேரன், பாண்டியன் வந்ததும் என்னுடைய வயசு என்ன அந்த பொண்ணு வயசு என்ன. உன்னை மனசுல சுமக்கும் அந்த பெண்ணிடம் இந்த மாதிரி எப்படி கேள்வி கேட்பாய் என்று திட்டி விடுகிறார்.

பிறகு நிலாவும், பாண்டியனிடம் நீங்கள் கேட்டது தப்புதான் என்று எடுத்து சொல்கிறார். இதனால் குற்ற உணர்ச்சியில் தவித்த பாண்டியன், வானதியை சந்தித்து மன்னிப்பு கேட்பதற்கு தயாராகி விட்டார். ஆனால் வானதி கோபத்தில் இருந்ததால் பாண்டியனிடம் பேசாமல் கையில் இருந்த குப்பையை பாண்டியன் தலையில் கொட்டி விடுகிறார். இதை எல்லாம் பார்த்த சோழன், பாண்டியனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கலாய்க்கிறார்.

அடுத்ததாக நிலா, கேஸ் சிலிண்டர் காலியாகிவிட்டால் இனி விறகு அடுப்பில் சமைக்க வேண்டாம் என்று சொல்லி இன்டக்ஷன் ஸ்டவ்வை வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். ஆனால் அதற்கான பாத்திரம் வீட்டில் இல்லாததால் சேரன் நான் வாங்கிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். அடுத்ததாக வீட்டு பாத்திரம் கொஞ்சம் மூட்டை கட்டி மேலே இருக்கிறது என்று சேரன் சொல்லி இருந்தார்.

அதை எடுக்கப் போகும் பொழுது ஒரு பழைய போட்டோ பல்லவன் கையில் கிடைக்கிறது. அதில் ஒரு பொண்ணு பல்லவனை சின்ன வயசுல இருக்கும்போது தூக்கி வைத்திருக்கிறது. அந்த போட்டோவை கையில் எடுத்த பல்லவன், நடேசன் இடம் இவங்க எதற்கு என்னை தூக்கி வச்சிருக்காங்க. அம்மா இறந்த பிறகு இவங்கள தானே கல்யாணம் பண்ணிட்டு வந்தீங்க.

இவங்க எதற்கு என்னை தூக்கி வச்சு போட்டோ எடுக்கணும் என்று கேள்வி கேட்கிறார். உடனே நடேசன், அவள் தான் உங்க அம்மா. உங்க அம்மா உன்ன தூக்கி வைக்காம வேற யாரை தூக்கி வைப்பாங்க என்று சொல்லியதும் அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்கள். அந்த வகையில் பல்லவன், சேரன் சோழன் பாண்டியன் கூட பிறந்தவன் இல்லை என்ற விஷயம் ஃப்ளாஷ் பேக் மூலம் அனைவருக்கும் தெரிய வரப்போகிறது.