Ayyanar Thunai: நிலாவும் பல்லவனும் கோயிலில் இருந்து வீட்டுக்கு வந்ததும், சோழன் வேகமாக வந்து நிலாவிடம் சொல்கிறார்: “ஒரு வழியாக நீங்க ஆசைப்பட்டது கிடைச்சிருச்சு. இவ்வளவு நாள் நீங்க எதுக்காக கஷ்டப்பட்டீங்களோ அது உங்க கையை தேடி வரப்போகுது.” அதற்கு நிலா, என்னங்க சொல்றீங்க? என்ன என் கைக்கு வரப்போகுது என்று கேட்கிறாள்.
பல்லவன் நக்கலாகச் சொல்லுகிறார்அண்ணி, உங்களுக்கு இன்னும் புரியலையா? அன்னைக்கு நீங்க சர்டிபிகேட்டுக்கு அப்ளை பண்ணீங்களே, அந்த சர்டிபிகேட் உங்களை தேடி வரப்போகுது உண்மையா? என்னோட சர்டிபிகேட் திருப்பிக் கிடைச்சிருச்சா? என்று நிலா சந்தேகத்துடன் சோழனை பார்த்து கேட்கிறார்.
ஆமாம் இப்பதான் எனக்கு கால் பண்ணி சர்டிபிகேட்டை வாங்கிட்டு போங்கனு சொன்னாங்க என்று சோழன் பதில் சொல்கிறார்.பல்லவன், அப்புறம் என்ன அண்ணி, நீங்க ஆசைப்பட்ட சர்டிபிகேட் இப்ப கிடைச்சிருச்சு.
பல்லவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
நல்ல ஜாப் போவீங். அப்புறம் இந்த பல்லவனை மறந்துட மாட்டீங்களே? என்று நக்கலாக கேட்கிறார்.நிலா டேய் பல்லவா, சும்மா இருடா. நீ வேற நேரம் காலம் புரியாம என்ன கலாச்சிட்டு இருக்கே என்று சொல்லுகிறாள்.
சோழன் சரி வாங்க, நம்ம டக்குன்னு போய் சர்டிபிகேட் வாங்கிட்டு வந்துரலாமுனு சொல்லுறான்.நிலா டேய் பல்லவா, நான் சர்டிபிகேட் வாங்கிட்டு சீக்கிரம் வந்துருவேன். நீ வீட்டை விட்டு எங்கேயும் போயிடாத என்கிறாள். சரி அண்ணி போயிட்டு வாங்கனு சொல்லுறான் பல்லவன்.
இதற்கிடையில் பல்லவன் சேரனிடம் அண்ணா எங்க அம்மாவை பத்தி உனக்கு தெரியுமா அவங்களை பார்த்ததும் உனக்கு கோபம் வரலயான்னு கேக்குறான். உடனே சேரன் பல்லவனிடம் உங்க அம்மா உயிரோட இருந்தா உன்னை பார்க்க வந்துருப்பாங்க இப்ப அவங்க உயிரோட இல்லனு நினைக்கிறேன்னு சொல்றன். உடனே பல்லவன் பீல் பண்ணி அழுகிறான். சோழன் பல்லவனை பார்த்து பீல் பண்ணாத உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். நாம எப்பவும் போல சந்தோசமா இருப்போம்னு சொல்றான்.
இதன் பிறகு நிலாசோழன் ரெண்டு பேரும் சர்டிபிகேட் வாங்க கிளம்புறாங்க. காலேஜ் போய் வெயிட்டிங் ஹால்ல் வெயிட் பண்ணிக்கிட்டிருக்காங்க. அங்க மேடம் வந்து சோழனிடம் பேசுறாங்க: “இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க என்று உடனே சோழன் “நீங்க கூட இந்த டிரஸ்ல செமையா இருக்கீங்கனு சொல்லுறான்
இதைக் கேட்ட நிலா, ரெண்டு பேரும் மாறி மாறி வழிஞ்சிக்கிறதைக் கண்டு கொஞ்சம் கடுப்பாவுறாங்க.
சோழன் அவங்கக் கடுப்பானதை தெரிஞ்சுக்கிட்டு இன்னும் கடுப்பாக்குற மாதிரி பேசறாரு.”மேடம், என்னோட சர்டிபிகேட் வாங்கதான் கூப்பிட்டீங்களே என்று நிலா கேக்குறாள்.
உடனே மேடம் ஐயோ நான் அதை மறந்தே போய்ட்டேன் . இவரு கூட பேசுனாலே எல்லாத்தையும் மறந்துட்டேன் என்று ஒரு நிமிஷம் இருங்கனு மேடம் உள்ள போனதும் நிலா சோழனை பார்த்து என்னங்க இவ்வளவு பச்சையா வழியறீங்கனு கேட்கிறாள்.
சோழன் இப்படி எல்லாம் பேசுனாதான் அவங்க சர்டிபிகேட் சீக்கிரம் தருவாங்க. நாளைக்கே ஏதாவது ஹெல்ப் கேட்டா டக்கு டக்குன்னு பண்ணுவாங்கனு சொல்லுறான்.மேடம் வெளியே வந்து இந்தாங்க நிலா, உங்களோட சர்டிபிகேட். இப்போ ஹாப்பி தானே.
நிலா ரொம்ப தேங்க்ஸ் மேடம் இந்த சர்டிபிகேட்டுக்காக ரொம்ப கஷ்டப்பட்டேன் என்றாள். தேங்க்ஸ் எனக்கு சொல்லாதீங்க. உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்லுங்க. அவர்தான் ரொம்ப கஷ்டப்பட்டாரு. சோழன் மாதிரி பையன் கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் என மேடம் சொல்கிறாள்.
நிலா சோழனை பார்த்து ரொம்ப தேங்க்ஸ். உங்களால் தான் இந்த சர்டிபிகேட் கிடைச்சிருச்சுனு சொல்றாள். சோழன் நிலாவை நீங்க ஆசைப்பட்ட சர்டிபிகேட் வாங்கி கொடுத்துட்டேன். எனக்கு ட்ரீட் கிடையாதானு கேக்குறான்.ட்ரீட் தானங்க கொஞ்ச நேரம் காரை நிறுத்துங்க.
உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க. வாங்கி தரேனு சொல்றாள்.சோழன் இப்ப எந்த ட்ரீட்டும் வேண்டாம். நீங்க இந்த சர்டிபிகேட் வச்சு நல்ல ஜாப் போயிட்டு, அங்க வர சேலரில எனக்கு ஏதாவது வாங்கி கொடுங்கனு சொல்றான்.
உடனே நிலா இந்த சர்டிபிகேட்டுக்காக நம்ம ரொம்ப கஷ்டப்பட்டோம். அடுத்து நல்ல ஜாப் தேடணும் சொல்றாள். சோழன் எனக்கு தெரிஞ்ச ஒரு கம்பெனி இருக்கு.சொல்லிடறேன். நிலா அதுக்கு இந்த வாட்டி நானே நல்ல கம்பெனியா பாத்துக்கறேன். என்ன ஆள விடுங்கனு சிரிச்சிட்டு இருவரும் பீச் க்கு போறாங்க.
அங்க ஸ்கூல் காலேஜ் ல நடந்ததை பத்தி பேசி சந்தோசமா இருந்த சமயம் பல்லவனை பத்தி பீல் பண்ணுறாங்க. உடனே நிலா வீட்ல எல்லாரும் சோகமா இருக்காங்க அதனால எல்லாரும் ஒரு ட்ரிப் போயிட்டு வாங்கணு ஐடியா கொடுக்கா .சோழன் நீங்களும் வாங்கனு நிலவை கூப்பிடுறான்.
அதுக்கு நிலா நான் வரல நீனா நாலு பெரும் போயிடு வாங்கனு சொல்றாள். உடனே நிலாவும் சோழனும் வீட்டுக்கு போறாங்க. நிலாவும் ட்ரிப் போறாளா ? இல்லையா என்பதை இனிவரும் எபிசோடில் பார்க்கலாம்.