Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி ஏமாற்றிவிட்டு ராதிகாவுடன் போன பிறகு பெருசாக துவண்டு போகாமல் பாக்யா தனக்கான ஒரு விஷயத்தை நோக்கி போக வேண்டும் என்று சமையல் வேலையை விடாமுயற்சியுடன் செய்து தற்போது ஹோட்டல் செய்யும் அளவிற்கு சொந்த காலில் நின்னு வெற்றி பெற்று வருகிறார்.
இதற்கிடையில் எத்தனையோ பிரச்சனைகளும் எதிர்ப்புகளும் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி நினைத்ததை சாதிக்கும் விதமாக ஹோட்டல் பிசினஸை செய்து வருகிறார். ஈஸ்வரி வேண்டாம் என்று டார்ச்சர் செய்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் எனக்கான வேலை இதுதான்.
இதுதான் என்னுடைய அங்கீகாரம் இதை யாருக்காகவும் நான் நிறுத்த மாட்டேன். குடும்பம் வேற என்னுடைய பிசினஸ் வேற என்று தனியாக யோசித்து குடும்பத்தையும் விட்டுக் கொடுக்காமல் பிசினஸைய்யும் விடாமல் பாக்யா ஜெயித்துக் கொண்டே வருகிறார்.
ஆனால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியலில் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை குணசேகரின் அடிமைகளாக மட்டுமே நான்கு பெண்கள் அடுப்பாங்கரையில் புரணி பேசிக்கொண்டு வருகிறார்கள். ஜனனி தொழிலதிபராக வேண்டும் என்ற நோக்கத்தில் படித்திருந்தாலும் வாய் சவடால் மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை.
நந்தினி, மிளகாய் பிசினஸ் பாதியிலேயே முடக்கி விட்டார். ரேணுகா பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்து ஒரு பெரிய ஸ்கூலை வழிநடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதைப் பற்றியும் கவலையில்லாமல் அடிமையாக இருக்கிறார். ஈஸ்வரி பேச்சு திறமைக்கு தகுந்தார் போல் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிக்கும் அளவிற்கு பேசி வந்தார்.
ஆனால் அவருடைய வாழ்க்கை என்று வரும்போது வாயை மூடி வேடிக்கை மட்டும் பார்க்கும் ஒரு சோலை காட்டு பொம்மையாகத்தான் இருக்கிறார். இப்படிப்பட்ட இந்த நான்கு மருமகளை விட பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி மருமகளாக இருந்து வரும் பாக்யா பல டார்ச்சர்களையும் தாண்டி தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்.