Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜியின் உண்மையான ரகசியத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் விஜி கூட நெருங்கி பழக வேண்டும் என்று வீரா பிளான் போட்டார். அதன்படி கண்மணி, நானும் ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்க தான் வந்திருக்கிறேன் என்று விஜியை நம்ப வைத்து விட்டார். உடனே விஜி, போடும் பிளானை கண்மணி இடம் சொல்லும் அளவிற்கு நம்பி விட்டார்.
அந்த வகையில் அடுத்த டார்கெட் வள்ளி தான் என்று விஜி. கண்மணி இடம் சொல்லி இருக்கிறார். இதனால் கோயில் பூஜையை முடிக்க கிளம்பிய வள்ளியை பாதுகாப்பாக வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று கண்மணியும் கூடவே போகிறார். அதனால் பரிகார பூஜையை செய்யும் விதமாக வள்ளி பிருந்தா கண்மணி வீரா மற்றும் விஜி என அனைவரும் போய்க் கொண்டிருக்கும் பொழுது விஜி காணாமல் போய்விடுகிறார்.
விஜியை தேடும் விதமாக கண்மணியும் பிருந்தாவும் அந்த காட்டுக்குள் திரும்பிப் தேடிப் பார்க்கிறார்கள். அப்பொழுது அங்கே இருந்த ஒரு குழிக்குள் பிருந்தா மாட்டிக் கொள்கிறார். பிருந்தாவை காப்பாற்றும் விதமாக கண்மணி வீரா போராடுகிறார்கள். அந்த சமயத்தில் விஜி அனுப்பிய ரவுடியாக்கள் வள்ளியிடம் பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
உடனே பிரிந்தாவை காப்பாற்றி விட்டு கண்மணி வீரா மற்றும் பிருந்தா மூன்று பேரும் சேர்ந்து வள்ளியை ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுவதற்கு சண்டை போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் இவர்களுக்கு அடிபட்ட நிலையில் மாறன், ருத்ர தாண்டவம் ஆடும் விதமாக கருப்பசாமியாக ரவுடியாக்களை அடித்து தும்சம் பண்ணுகிறார்.
இதோடு நிறுத்தாமல் வள்ளி கோவிலில் இருக்கும் தண்ணீருக்குள் மூழ்கும் பொழுது அங்கேயும் விஜி, அடியாட்களை அனுப்பி வள்ளி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த பார்த்தார். அப்பொழுது ராகவன் மற்றும் மாறன் தான் வள்ளியத்தையே காப்பாற்றி விஜியை தோற்கடித்தார்கள்.
தொடர்ந்து விஜி கொடுக்கும் டார்ச்சரில் இருந்து வள்ளியை என்னதான் எல்லோரும் காப்பாற்றினாலும் விஜியின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வராமல் இழுத்தடித்து வருகிறார்கள். சீக்கிரம் விஜியின் ரகசியத்தை ராமச்சந்திரன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தி வீட்டை விட்டு விஜியை அனுப்பி பிருந்தாவையும் கார்த்திகையும் ஒன்று சேர்த்து வைக்கப் போகிறார்கள்.