நிலா கொடுத்த ஐடியா, பல்லவனை கண்டுபிடித்த சேரன் சோழன்.. அப்பா பாசத்தை காட்டிய அண்ணன்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், தனக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்லை என தெரிந்து கொண்ட பல்லவன் மனதளவில் நொந்து போய்விட்டார். அதனால் காலேஜிலிருந்து பாதியிலேயே கிளம்பி போனதால் வீட்டுக்கு வரவில்லை. காலேஜுக்கு போன பல்லவன் காணவில்லை என்றதும் நிலா பதட்டம் அடைந்து விட்டார்.

அப்பொழுது நிலா, சோழன் சேரன் மற்றும் பாண்டியனுக்கு போன் பண்ணி பல்லவன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று தகவலை சொல்லி விடுகிறார். உடனே சேரன் சோழன் இருவரும் சேர்ந்து பல்லவன் காலேஜ் மற்றும் நண்பர்களிடம் விசாரித்து பார்க்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியனும், பல்லவன் போகிற இடத்தில் எல்லாம் போய் பார்க்கிறார்.

எங்கு தேடிப் பார்த்தாலும் பல்லவன் இல்லை என்றதும் எல்லோரும் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் நிலா மட்டும் வீட்டில் தனியாக இருந்து பல்லவனை நினைத்து பீல் பண்ணுகிறார். அப்பொழுது நடேசன் வீட்டிற்கு வந்த நிலையில் பல்லவனை காணும் என்று சொல்கிறார். ஆனால் நடேசன், அவன் எங்கே இருக்கான் தான் யாருக்கும் தெரியாது.

அவனுக்கு வீடு எங்க இருக்குன்னு தெரியும், போன அவனுக்கு வீட்டுக்கு வர தெரியும், இதெல்லாம் ஒரு விஷயம் என்று கவலைப்படாமல் வேலையை பாருங்க என்று எதார்த்தமாக சொல்லிவிட்டு தூங்கப் போய் விடுகிறார். ஆனால் நிலா டென்ஷன் ஆகி இருக்கும் பொழுது பல்லவன் ஒருமுறை மனம் கஷ்டமாக இருந்தால் நான் கடற்கரைக்கு போய் வருவதாக சொல்லி இருந்தார்.

நிலாவுக்கு இந்த யோசனை வந்த நிலையில் சோழனுக்கு போன் பண்ணி ECR இல் இருக்கும் கடற்கரைக்கு போயிட்டு பார்க்க சொல்கிறார். அதன்படி சோழன் மற்றும் சேரன் கடற்கரைக்கு போகிறார்கள். போனதும் பல்லவன் அங்கே தான் இருக்கிறார் என்று தெரிந்ததும் சோழன் பல்லவனிடம் பேசுகிறார். இந்த விஷயம் தெரிந்ததனால் நீ ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்.

நீ எப்பொழுதும் போல எங்க கூட பிறந்த தம்பிதான், எங்களை பற்றி யோசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை உன்னை தன் மகனாக பார்த்துக் கொண்டு அப்பா போல் பாசத்தைக் காட்டிய சேரன் அண்ணாவைப் பற்றியும் நீ யோசிக்காமல் இங்கு இருப்பது எப்படி சரியாக இருக்கும் என்று சொல்கிறார். உடனே பல்லவன், சேரனை தேடி கட்டி அரவணைத்துக் கொள்கிறார்.