நிலாவை நம்பியதால் அவமானப்பட்டு நிற்கும் சேரன்.. கார்த்திக்காவை லாக் பண்ணிய குடும்பம்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய நிலா மேட்ரிமோனி மூலம் இரண்டு பொண்ணுங்களை பார்த்தார். ஆனால் அது எதுவும் செட் ஆகவில்லை என்பதால் சேரனுக்கு ஏற்ற ஜோடி கார்த்திகா தான். கார்த்திகா மனசிலும் சேரன் இருப்பதால் சேரனை புரிந்து கொள்வதில் எந்தவித கஷ்டமும் வராது.

அதனால் இவர்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து விடலாம் என்று நிலா முடிவு பண்ணி விட்டார். இந்த முடிவை சோழன் பல்லவன் பாண்டியனிடம் சொல்லிவிட்டார். இவர்களும் நிலா என்ன செஞ்சாலும் சரியாகத்தான் இருக்கும் என்று முடிவு பண்ணி சேரனிடம் பேசினார்கள். சேரன் இவர்கள் சொல்வதைக் கேட்டு சரி என்று சொல்லி மாப்பிள்ளை கோலத்தில் கோவிலுக்கு வந்து விட்டார்.

அங்கே நிலா, கார்த்திகா வருவதற்காக டென்ஷனாக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கார்த்திகாவுக்கு போன் பண்ணி எல்லாம் ஓகே தானே, ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அப்பொழுது கார்த்திகா எந்த பிரச்சினையும் இல்லை நான் கோவிலுக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே நிலா, வரும்பொழுது படித்த சர்டிபிகேட், பான் கார்டு, ஆதார் கார்டு எல்லாத்தையும் கொண்டு வாங்க என சொல்கிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி கார்த்திகாவும் வீட்டில் இருந்த சர்டிபிகேட் எல்லாத்தையும் எடுத்துட்டு கோவிலுக்கு கிளம்புகிறார். ஆனால் கிளம்பும்போது கார்த்திகா அம்மா பார்த்து விடுகிறார். பார்த்ததும் எங்கே போகிறேன் என்று கேட்ட நிலையில் கார்த்திகா, சேரன் மாமா எனக்காக கோவிலில் காத்துக் கொண்டிருக்கிறார். அவரை கல்யாணம் பண்ணுவதற்கு நான் போகிறேன் என்று உளறி விடுகிறார்.

உடனே கார்த்திகாவின் அம்மா கார்த்திகாவை வெளியே போகாதபடி பிளாக் மெயில் பண்ணுகிறார். இதை பார்த்த கார்த்திகாவும் வீட்டிலேயே இருந்து விடுகிறார். ஆனால் இது எதுவும் தெரியாத நிலா சேரன் மற்றும் அனைவரும் அங்கே காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசியில் கார்த்திகா சொதப்பியதால் நிலா ஏற்பாடு பண்ண இந்த கல்யாணத்தில் சேரன் அவமானப்பட்டு நிற்கப் போகிறார்.

இந்த நிலா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் முதல் பாகத்தில் இப்படித்தான் ஆதிரைக்கு பிடித்த மாதிரி கல்யாணத்தை பண்ணுவதற்கு பல வழிகளில் முயற்சி எடுத்தார். ஆனால் அதிலும் தோற்றுப் போய் தான் நின்றார். அதே மாதிரி இப்பொழுது அய்யனார் துணை சீரியலில் சேரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று முயற்சி எடுப்பதில் எல்லாவற்றிலும் தோற்று தான் வருகிறார்.