Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கார்த்திகா கல்யாணம் பண்ண போற பையன் எப்படி இருக்கிறான் என்று பார்த்து ஆக வேண்டும் என நினைத்த சோழன், கண்ணுக்கு கண்ணாடி முகத்தில் மாஸ்க் போட்டு கார்த்திகா வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். அங்கே போட்டோ எடுக்கும் நபருடன் பக்கத்தில் இருப்பதால் போட்டோ எடுக்க வந்திருப்பார் என்று கார்த்திகாவின் அம்மா நினைத்து விட்டார்.
அதுக்கேற்ற மாதிரி சோழனும் அங்கே டிராமா போட்டதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. பிறகு கார்த்திகாவுடன் சேர்ந்து போட்டோ எடுக்கும்போது கார்த்திகாவிடம் எங்களை ஒரு நாள் முழுவதும் கோவிலில் காக்க வைத்துவிட்டு நீ இங்கே சந்தோசமாக நிச்சயதார்த்தத்திற்கு தயாராகி விட்டாயா?? நல்ல வேலை எங்க அண்ணன் உன்னிடமிருந்து தப்பித்து விட்டார்.
உனக்கு இந்த மாப்பிள்ளை தான் சரியாக இருக்கும் அவ மூஞ்சியும் மொகரையும் பாரு என்று சொல்லிவிட்டு கார்த்திகாவை வெறுப்பேற்றி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். சோழன், கார்த்திகா வீட்டுக்கு போனதால் என்ன ஆகும் என்ற பயத்தில் நிலா இருக்கிறார். ஆனால் பல்லவனும் பாண்டியனும் எங்க அண்ணன் இந்த மாதிரி விஷயத்தில் எல்லாம் கில்லாடி.
எதிலும் மாட்டாமல் எஸ்கேப் ஆகி வந்துவிடுவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது சோழன் வந்து மொபைலில் இருக்கும் கார்த்திகாவின் மாப்பிள்ளை ஃபோட்டோவை காட்டுகிறார். எல்லோரும் பார்த்து நம் அண்ணனை விட மாப்பிள்ளை சுமாராகத்தான் இருக்கிறார் என்று கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பிறகு அங்கே வந்த சேரனும் அந்த போட்டோவை பார்க்கிறார்.
மாப்பிள்ளை நல்லா தான் இருக்கிறார், ஆனால் கார்த்திகாக்கு இன்னும் சூப்பரான மாப்பிள்ளை கிடைத்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். கார்த்திகா ரொம்ப நல்ல பொண்ணு என்று மறுபடியும் கார்த்திகாவின் புராணத்தை பற்றி பேச ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் கார்த்திகாவுக்கு மாப்பிள்ளை மொக்கையாக தான் கிடைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் சேரன் மனசு கொஞ்சம் குளிர ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில் அங்கு இருப்பவர்களுக்கும் சந்தோசம் வந்துவிட்டது. ஆனாலும் இந்த கார்த்திகா, சேரனுக்கும் சேரன் குடும்பத்துக்கும் சரிப்பட்டு வர மாட்டார். ஏனென்றால் ஒரே தெருவில் இருந்து கொண்டு அம்மாவுக்கு எதிராக வாக்கப்பட்டு வந்தால் தொடர்ந்து ஏகப்பட்ட சிக்கல்களை சந்திக்கும் படி தான் இருக்கும். அதனால் கார்த்திகாவுக்கு தற்போது பார்த்திருக்கும் மாப்பிள்ளை உடன் தான் கல்யாணம் நடக்கும். சேரனுக்கு புதுசாக வேற ஒரு ஜோடி வரப்போகிறார்.