நிலா பேச்சை மீறி கார்த்திகாவின் கல்யாணத்துக்கு போன சோழன்.. சேரனின் ஆசை நிறைவேறுமா?

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், கார்த்திகாவின் கல்யாணம் கிட்ட நெருங்கிய நிலையில் சேரன் மனசு கொஞ்சம் கொஞ்சமாக வாட ஆரம்பித்து விட்டது. இதனால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுகிறார். சேரனின் நிலமை பார்த்து தம்பிகளும் அண்ணன் மன வருத்தத்தில் இருக்கிறார் என்று புரிந்து கொண்டார்கள்.

அதிலும் சோழன், சேரனை தனியாக கூப்பிட்டு மனதில் இருப்பதை எல்லாம் கொட்டும்படியாக ஒரு சம்பவத்தை செய்துவிட்டார். அதனால் சேரனும் மனசில் இருக்கும் ஆசை எல்லாம் சொல்லும்படி கார்த்திகா மீது வைத்திருந்த காதலையும் வெளிப்படுத்தி விட்டார். அடுத்ததாக வீட்டில் இருந்தால் கார்த்திகாவின் ஞாபகம் வந்து கொண்டே இருக்கும் என்று வேலை இருப்பதாக பொய் சொல்லி சேரன் வெளியே கிளம்புகிறார்.

ஆனால் அப்பொழுது நடேசன் வந்து சிக்கன் வாங்கி கொடுத்து சமைத்துக் கொடுக்கும்படி சேரனை வீட்டிலேயே இருக்க வைத்து விடுகிறார். சேரன் மன வருத்தத்தில் இருக்கிறார் என்று புரிந்து கொண்ட நிலா நான் சமைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் சேரன் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சமைப்பதற்கு போய்விடுகிறார்.

ஆனாலும் சோழனுக்கு கார்த்திகா கல்யாணம் பண்ணும் அந்த துபாய் மாப்பிள்ளையே பார்க்க வேண்டும் என்று நினைப்பு இருக்கிறது. உடனே பாண்டியன் பல்லவனையும் கல்யாணத்துக்கு கூப்பிடுகிறார். ஆனால் நிலா நீங்கள் அங்கே சும்மா சாதாரணமாக போனால் அவங்களுக்கும் பிரச்சினை நமக்கும் பிரச்சனை அதனால் போகக்கூடாது என்று சொல்கிறார்.

ஆனால் சோழன், நிலா பேச்சை கேட்காமல் கார்த்திகாவின் கல்யாணத்திற்கு மாஸ்க் போட்டு போய் விடுகிறார். அப்படி மொட்டை மாடியில் நடக்கும் பங்க்ஷன்க்கு சோழன் போனதும் கார்த்திகாவின் அம்மாவுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. இதனால் சோழன் மூலமாக கார்த்திகாவின் கல்யாணத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடைசியில் சேரன் கார்த்திகாவின் கல்யாணம் தான் நடக்கப் போகிறது.