Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் தவிர மற்ற அனைவரது கேரக்டரும் அவ்வப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. இதில் கதிர் கொஞ்ச நாள் நல்லவராகவும், சக்தி கெட்டவர் ஆகவும், ஞானம் புத்தி கெட்டவர் ஆகவும் மாறிக்கொண்டே இருந்தார்கள். இதே மாதிரி தான் தர்ஷன் ஆரம்பத்தில் அப்பா மாதிரி அடாவடித்தனம் பண்ணும் ரவுடியாக இருந்தார்.
பிறகு அம்மா பாசத்தை புரிந்து கொண்டு பெண்களுக்கு சப்போர்ட்டாக குணசேகரனை எதிர்த்து நின்றார். அதன் பின் பணம் இல்லாமல் ஒன்னும் பண்ண முடியாது, அப்பா தான் நமக்கு தேவை என்று கட்சி மாதிரி குணசேகரன் பின்னாடி ஒளிந்து கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் குணசேகரனுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக ஈஸ்வரியே மட்டமாக பேசி ரொம்பவே மோசமாக நடந்து கொண்டார்.
அந்த சமயத்தில் குணசேகரன் என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் விதமாக அன்பு கரசியை கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதம் கொடுத்தார். இந்த சூழ்நிலையில் காதலித்து வந்த பார்கவியை டீலில் விட்டார். பிறகு ஈஸ்வரி, தர்ஷன் கூட இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தர்ஷன் கேரக்டரை மாற்றி தற்போது நல்ல பிள்ளையாக தர்ஷனை கொண்டு வந்து விட்டார்.
உடனே தர்ஷன், அப்பா செய்வது எல்லாமே தவறுதான். நமக்கு இந்த கல்யாணம் தேவையில்லை என்று முடிவு பண்ணி விட்டார். ஆனால் இதை வீட்டில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் இனியும் இங்கு இருப்பது வேஸ்ட் என்று புரிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் காலேஜிலிருந்து ஓடி விட்டார். அந்த வகையில் தர்ஷன், ஜீவானந்தத்தை தேடி போகப் போகிறார்.
ஜீவானந்தம் கிட்ட போனா மட்டும் தான் தர்ஷனுக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்த தர்ஷன் சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்திருக்கிறார். தர்ஷன் காணவில்லை என்றதும் அறிவுக்கரசி, குணசேகரன் வீட்டில் வந்து ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார். உடனே குணசேகரனும் இத்தனை நாளாக அடக்கி வைத்திருந்த கோபத்தை வெளிக்காட்டும் விதமாக ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார்.
பாவம் இதில் பகடைக்கையாக மாட்டிக்கொண்டது ஈஸ்வரி தான். அதற்கு ஏற்ற மாதிரி சக்தியும் தற்போது தர்ஷன் மீது பாசத்தை காட்டும் விதமாக தர்ஷனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற அர்த்தத்தில் பெண்களுக்கு சப்போர்ட் பண்ணும் கைப்பிள்ளையாக இப்பொழுது மாறிவிட்டார். இனி தர்ஷனை கண்டுபிடிக்கும் விதமாக குணசேகரன் அறிவுக்கரசி கதிர் ஒவ்வொருவரும் ரவுடிசம் பண்ணப் போகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி தர்ஷனை ஜீவானந்தம் காப்பாற்றி மேல் படிப்புக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப் போகிறார். அறிவுகரசி குணசேகரன் போட்ட பிளான் எல்லாம் தோற்றுப் போகப் போகிறது.