Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி மீது ஈஸ்வரி கோபத்தில் இருந்ததால் ஈஸ்வரியை சமாதானப்படுத்துவதற்காக கோபி வீட்டுக்கு போகிறார். போனதும் ஈஸ்வரிடம் செண்டிமெண்ட் ஆக பேசி கோபி கவுத்து விட்டார். அதன் பின் இரண்டு பெரும் பாசத்தைக் காட்டி ஓவர் டிராமா போட ஆரம்பித்து விட்டார்கள். இதை பார்த்து செழியன் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்.
அப்பொழுது பாக்கியா, இனியா வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். இனியா வந்த நிலையில் இனியாவிற்கு பிறந்தநாள் வருவதால் அனைவரும் அட்வான்ஸ் ஆக வாழ்த்துக்களை சொல்லி பரிசுகளை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஈஸ்வரி பணத்தை எடுத்துட்டு வந்து பாக்கியாவிடம் கொடுத்து இனியாவிற்கு ஒரு நல்ல செயினை வாங்கி கொடுக்க சொன்னார்.
அதன்படி பாக்கியா மற்றும் இனியா ஷாப்பிங் போயிட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கோபியும் இனியாவிற்கு டைமண்ட் மோதிரத்தை வாங்கிட்டு வந்து சர்ப்ரைஸ் பண்ணி கொடுக்கிறார். பிறகு இனியாவிற்கு தேவையான டிரஸ் நகைகள் அனைத்தையும் இனியாவிடம் கொடுத்து சந்தோஷப்படுத்தி விட்டார்கள். அத்துடன் செழியனும் இனியாவிற்கு ரொம்பவே பிடித்த மொபைல் போனை பரிசாக கொடுத்து விட்டார்.
இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் இனியாவின் சந்தோஷத்திற்காக சர்ப்ரைஸ் கொடுத்து பரிசுகளையும் அள்ளிக் கொடுத்து விட்டார்கள். இதே மாதிரி நித்தேஷும் உனக்கு நிறைய சர்ப்ரைஸ் பண்ணுவார் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அப்படி கோபியுடன் வீட்டுக்கு இனிய போகும் பொழுது ஐஸ்கிரீம் கேட்டதால் கோபி வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சுதாகர் வீட்டில் இனிய படும் கஷ்டத்தை யாரும் புரிந்து கொள்ளவில்லை. இனியாவும் யாரிடமும் சொல்லாமல் மறைத்துக் கொண்டு வருகிறார், அந்த வகையில் இனியாவின் பிறந்தநாளை சுதாகர் வீட்டில் இருப்பவர்கள் மறந்து விட்டு வாழ்த்துக்கள் சொல்லாமல் கூட இருக்கப் போகிறார்கள். அதிலும் நிதிஷ், வழக்கம் போல் இனியாவை காயப்படுத்தும் விதமாக சைக்கோ தனமாக நடந்து கொள்ளப் போகிறார்.
ஆசை ஆசையாக வளர்த்த இனியாவை, சுதாகர் மாதிரி ஒரு குடும்பத்தில் கொடுத்து இனியாவின் மொத்த சந்தோசத்தையும் பரிதவிக்க விட்டார்கள். இது எதுவும் தெரியாமல் கோபி பாக்கியா இருவரும் இனியா சந்தோசமாக இருக்கிறார் என்று தவறாக புரிந்து கொண்டு புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.