எதிர்நீச்சல் 2 சீரியலில் சைலண்டாக இருக்கும் குணசேகரன்.. ஒன்றாக சேர்ந்து பிசினஸ் பண்ணும் 4 மருமகள்கள்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தாரா பங்க்ஷன் நந்தினி நினைத்தபடி முடிந்தது ஆனாலும் இதற்கு பெருசாக குணசேகரன் சைடுல இருந்து யாரும் கொந்தளிக்கவில்லை. அதே மாதிரி ஹோட்டலில் போய் சாப்பிட்டு வருகிறோம் என்று வீட்டிலிருந்து கிளம்பிய பெண்கள் ஒரு சின்ன பார்ட்டியை ரெடி பண்ணி அதில் ஆட்டம் பாட்டம் என கொண்டாடு இருக்கிறார்கள்.

அந்த வீடியோவையும் வீட்டில் இருந்து பார்த்த குணசேகரன் மற்றும் தம்பிகள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் இதற்கு பின்னாடி ஏதோ ஒரு ஆப்பு இருக்கிறது. அடுத்ததாக தர்ஷன், படிப்பு ரொம்ப முக்கியம் என்று புரிந்து கொண்டு ஈஸ்வரி பேச்சையும் கேட்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் பார்க்கவி செய்த உதவியின் மூலம் தர்ஷன் தற்போது பரீட்சை எழுதுவதற்கு தயாராகி விட்டார்.

இதையும் எதிர்பார்க்காத குணசேகரன், தர்ஷனை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார். ஆனால் இவர்கள் அனைவரும் சைலண்டாக இருந்து ஏதோ ஒரு காரியத்தை சாதிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. தற்போது இதையெல்லாம் தாண்டி முன்னேற வேண்டும் என்று துடிக்கும் நான்கு மருமகள்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு பிசினஸ் பண்ணப் போகிறார்கள்.

அந்த வகையில் நந்தினி ஏற்கனவே சமையல் செய்து ஆர்டரை கொடுத்து வந்தார். இதே பிசினஸை கையில் எடுக்கும் விதமாக நான்கு மருமகள் ஹோட்டலை ஆரம்பிக்கப் போகிறார்கள். அதற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக வீட்டில் இருந்தபடியே முதலில் சமைத்து வெளியே கொடுக்கப் போவதாக ஜனனி, குணசேகரனிடம் சொல்கிறார்.

இதற்கும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஈஸ்வரி அப்பா வந்து ஏதோ ஒரு குட்டையை குழப்புவது போல் அக்கறை காட்டும் விதமாக பேசுகிறார். ஆனால் இவருக்கு பின்னாடி இருந்து இந்த மாதிரி பேச சொன்னது குணசேகரன் ஆகத்தான் இருப்பார். இந்த பெண்களும் ஏதாவது பண்ண வேண்டும் என்று முயற்சி எடுப்பதும் வழக்கமாகிவிட்டது, அதை தடுத்து பிரச்சினை பண்ணுவதும் குணசேகரனுக்கு வழக்கமா போச்சு.

ஆனால் இப்பொழுது எதையும் கண்டுகொள்ளாமல் சைலண்டாக இருப்பது தான் நான்கு மருமகளுக்கும் ஆபத்தாக முடிய போகிறது. இதுல இன்னொரு விஷயம் அடிக்கடி சக்தி கதிர் மற்றும் தர்ஷன் கேரக்டர் மாறிக்கொண்டே வருகிறது. இப்பொழுது தர்ஷன் பெண்களுக்கு சப்போர்ட்டாக நிற்கிறார், சக்தி அண்ணனுக்கு சப்போர்ட்டாக நிற்கிறார். கடைசி வரை புரியாத புதிராகத்தான் கதை போய்க்கொண்டிருக்கிறது.