சிங்கப்பெண்ணில் வார்டனை தேடி வரும் ஆதாரம்.. அம்பலமாகும் ஆனந்தியின் கர்ப்பம்!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வார்டன் மனோன்மணிக்கு தெரிய வருவது போல் இந்த ப்ரோமோ காட்டப்படுகிறது.

அதுவும் இந்த விஷயத்தை பற்றி வார்டனுக்கு எதுவுமே தெரியாத பட்சத்தில் ஆதாரமே அவருடைய கைகளுக்கு வந்து சேருகிறது.

அம்பலமாகும் ஆனந்தியின் கர்ப்பம்!

ஒரு வழியாக அன்பு கண் விழித்தது போல் இன்றைய எபிசோடு இருக்கப் போகிறது. மேலும் கண்ணை திறந்ததும் ஆனந்தி எங்கே என்றுதான் முதலில் அன்பு கேட்கிறான். உடனே துளசி லலிதா தான் ஆனந்தியை அன்புவை பார்க்கக் கூடாது என தடுத்து நிறுத்தியதை சொல்கிறாள்.

அதே நேரத்தில் மெடிக்கல் ஷாப் ஓனர் ஹாஸ்டலுக்கு வந்து வார்டன் மனோன்மணியை சந்திக்கிறார். மேலும் ஹாஸ்டலில் இருக்கும் ஒரு பெண் மாத்திரை ஒன்றை எடுத்துக்கொண்டு மெடிக்கல் ஷாப்புக்கு வந்ததாக சொல்கிறார். மேலும் அது கர்ப்பமாக இருப்பவர்கள் உபயோகப்படுத்தும் மாத்திரை என்றும் சொல்கிறார்.

இது மனோன்மணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைகிறது. அந்த மெடிக்கல் ஷாப்புக்கு மாத்திரை எடுத்துக் கொண்டு சென்றது சௌந்தர்யா என்பது எல்லோருக்கும் தெரியும்.

அடுத்து சௌந்தர்யா மூலம் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை மனோன்மணி தெரிந்து கொள்ளப் போகிறார். இந்த விஷயம் தெரிந்ததும் அதை பற்றி வெளியில் சொல்கிறாரா? இல்லை அவரும் ஆனந்தியுடன் சேர்ந்து இந்த விஷயத்தை மறைக்கிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.