அய்யனார் துணை சீரியலில், அண்ணனுக்காக தன் காதலியை விட்டுக் கொடுக்கும் பாண்டியன். பாண்டியனின் காதலி எடுக்க போகும் முடிவு என்ன?

Vijay Tv : விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில். சோழன், பாண்டியன் ,பல்லவன் மற்றும் நிலா ஆகியவர்கள், சேரனுக்கு எப்படியாவது ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று மேட்ரிமோனியில் பார்த்து அடுத்தடுத்த பெண்களை பேசி முடிக்க பார்க்கிறார்கள்.

ஆனால் சேரனின் மன நிலைமையோ கார்த்திகாவை மட்டும்தான் எண்ணிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் தம்பிகளின் ஆசைகளுக்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள கூட சேரன் சம்மதிக்கிறார். ஆனால் எந்த பெண்ணும் சேரனின் வீட்டிற்கு வந்து வாழ தயாராக இல்லை. ஆனால் எப்படியாவது கார்த்திகாவின் திருமணத்திற்கு முன், சேரன் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என்று, நிலா மற்றும் தம்பிகள் மூவரும் முயற்சி செய்து வருகின்றனர்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்க பாண்டியனின் காதலி பாண்டியனின் கடைக்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பாண்டியனிடம் சொல்கிறார் உங்கள் வீட்டுக்கு வந்து வாழ்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று, உடனே பாண்டியன் அப்படி என்றால் நீ என் அண்ணன் சேரனை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்கிறான்.

சேரனை திருமணம் செய்து கொள்ள பாண்டியனின் காதலி ஒப்புக்கொள்வாரா?

இதை கேட்ட பாண்டியனின் காதலி அதிர்ச்சிக்குள்ளாகி பாண்டியனிடம் என்ன சொல்ல போகிறார். தன் அண்ணன் சேரனுக்காக தன் காதலியை விட்டுக் கொடுப்பாரா பாண்டியன். பாண்டியனின் சொல்லை கேட்டு பாண்டியனின் காதலி சேரனை திருமணம் செய்து கொள்வாரா. அவ்வாறு பாண்டியனின் காதலி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டால் கூட சேரன் ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் சேரனின் மனதில் கார்த்திகாவை தவிர வேற எந்த பெண்ணிற்கும் இடம் கிடையாது என்று நிலாவிற்கு நன்றாகவே தெரியும். சேரனின் மன வேதனையை புரிந்து கொண்டு நிலா கார்த்திகாவை சேரனுடன் சேர்த்து வைக்க திரும்ப கார்த்திகாவிடம் போய் நிலா பேசப் போகிறார்.

நிலாவின் உதவியோடு தம்பிகள் மூவரும் அண்ணனின் மன நிலைமையை புரிந்து கொண்டு கார்த்திகாவின் வீட்டை எதிர்த்து கார்த்திகாவை அழைத்து வந்து சேரனுக்கு திருமணம் செய்து வைப்பது போல் இந்த வார கதைக்களம் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.