Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி ஏதோ ஒரு காரணத்திற்காக ராமச்சந்திரன் குடும்பத்தை பழிவாங்குவதற்காக ஒரு டிராமா போட்டு கார்த்திக்கின் மனைவியாக வந்திருக்கிறார். ஆனால் விஜி மீது ஆரம்பித்ததிலிருந்து சந்தேகப்பட்ட மாறனுக்கு தற்போது வீராவும் கை கொடுத்திருக்கிறார்.
ஆனால் வள்ளி மட்டும் விஜி சொல்வதெல்லாம் உண்மை என்று வக்காலத்து வாங்கி வந்தார். ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வள்ளிக்கும் விஜி மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் பிருந்தா மற்றும் விஜி அடுப்பாங்களில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது.பிருந்தாவின் பெயரை டேமேஜ் பண்ணும் விதமாக விஜி கொதிக்கிற வெந்நீரை எடுத்து கையில் ஊற்றி விட்டார்.
இதை வள்ளி பார்த்த நிலையில், எதற்காக விஜி இந்த மாதிரி பண்ண வேண்டும். உண்மையிலேயே மாறன் வீரா சொல்வது போல் ஏதோ விஜி தவறு பண்ணுகிறார் என்று வள்ளிக்கு புரிந்து விட்டது. அத்துடன் பரிகாரம் பண்ணி யார் கார்த்திக்கின் உண்மையான மனைவி என்ற அர்த்தத்தில் சில பூஜைகள் கோவிலில் நடைபெறுகிறது.
அதன்படி பிருந்தா தான் கார்த்திக்கு ஏற்ற மனைவி என்று வந்த நிலையில் கார்த்திக் கையால் முறைப்படி பிருந்தா தாலி வாங்கிக் கொள்கிறார். இதனை தொடர்ந்து விஜியின் ரகசியத்தை கண்டுபிடிப்பதற்காக மாறன் மற்றும் வீரா ஒன்று சேர்த்து அடுத்தடுத்த விஷயத்தில் களம் இறங்கி இருக்கிறார்கள்.