Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா சொன்னதை கேட்டதும் சுதாகரிடம் பேசுவதற்காக கோபி வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் சுதாகரிடம் பாக்யா நடத்தும் மெஸ் பாக்யாவின் கனவு. எப்படியாவது திறமையை வைத்து ஒரு வெற்றி பெற வேண்டும் என்று விடாமுயற்சியுடன் போராடி வருகிறார்.
அதனால் பாக்யாவின் மெஸ்ஸை மூட வேண்டும் என்று நீங்கள் கனவில் கூட நினைச்சு பார்க்க முடியாது என்று சுதாகரிடம் சொல்கிறார். அதற்கு சுதாகர் இது என்னுடைய கௌரவ பிரச்சனையாக இருக்கிறது என்று சொல்கிறார். உடனே கோபி, பாக்கியா ரெண்டு ரெஸ்டாரண்டை சூப்பராக நடத்திட்டு வந்தார். அது உங்களுக்கே தெரியும், அதனால் தான் நீங்கள் அந்த ரெண்டு ரெஸ்டாரண்டையும் வாங்கிட்டீங்க.
அதுவும் எனக்கு தெரியும், ஆனால் இப்பொழுது நான் அதை பற்றி பேச வரவில்லை. பாக்கியாவின் மெஸ்ஸை மூடச் சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்கிறார். உடனே சுதாகரும் சரி என்று சொல்லிவிட்டார். அடுத்ததாக இனியா வேலைக்கு போகிறதை பற்றி கோபி, சுதாகரிடம் கேட்கிறார். அதற்கு சுதாகர், இப்பொழுது இனிய எங்கள் வீட்டு மருமகள். அவள் என்ன பண்ணனும் ஏது பண்ண கூடாது என்ற முடிவு நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.
இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொல்லி கோபியை நோஸ்கட் பண்ணி விடுகிறார். அடுத்ததாக பாக்யாவின் ஹோட்டலில் இனிய இருக்கிறார். அங்கே வந்த ஆகாஷிடம் எதார்த்தமாக இனிய பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கே நித்தேசும் வருகிறார். ஆனால் நித்தேசுக்கு ஏதோ சந்தேகம் வந்துவிட்டது. வீட்டுக்கு போய் இனியாவிடம் தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டு சைக்கோ மாதிரி நடந்து கொள்கிறார்.
பாவம் கோபி எடுத்த அவசர முடிவால் இனியா ஒரு சைக்கோவிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறார். அடுத்ததாக பாக்கியாவின் ஹோட்டலுக்கு பிரச்சினை பண்ணுவதற்காக லோக்கல் கவுன்சிலர் வருகிறார். ஆனால் பாக்கியா இதை சமாளிக்கும் விதமாக அமைச்சரிடம் போனில் பேசுவது போல் நடித்து அங்கே வந்த லோக்கல் கவுன்சிலரை சைலன்டாக வெளியே போக வைத்து விட்டார்.
எப்படியாவது ஜெயித்து காட்ட வேண்டும் என்று போராட நினைக்கும் பாக்யா வருகிற இன்னல்களை எல்லாம் தாண்டி ஒரு தொழில் அதிபராக மாற வேண்டும் என்ற நோக்கில் பயணித்து வருகிறார். இதற்கு தற்போது கோபியும் சப்போர்ட் பண்ணும் விதமாக கூடவே இருந்து எல்லா உதவிகளும் செய்து வருகிறார்.