கோபியிடம் சைக்கோ குடும்பத்தை பற்றி சொன்ன இனியா.. பாக்யாவிற்கு தெரியவந்த உண்மை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் அவசர புத்தியால் சுதாகர் குடும்பத்தை பற்றி விசாரிக்காமல் இனியாவை கட்டிக் கொடுத்து விட்டார். ஆனால் இனியா அங்கே போனதிலிருந்து நிம்மதி இல்லாமல் சித்திரவதை தான் அனுபவித்து வருகிறார். இனியா மட்டும் இல்லாமல் பாக்கியாவும் இரண்டு ஹோட்டலையும் இழந்து தற்போது கையேந்தி பவனை நடத்தி வருகிறார்.

போதாதருக்கு நித்தேஷ்க்கு தற்போது சந்தேக புத்தி வர வந்துவிட்டது. அந்த புத்தியால் இனியா என்ன பண்ணினாலும் அது ஆகாசையும் இனியாவையும் சேர்த்து வைத்து பேசும்படி மோசமான நிலைமை ஆகிவிட்டது. இத்தனைக்கும் நித்தீஷ், இனியவை மோசமாக பேசும் பொழுது அந்த இடத்தில் சுதாகர் மற்றும் அவருடைய மனைவியும் இருக்கிறார்.

இவர்களும் கண்டுகொள்ளாமல் மகன் என்ன பேசினாலும் சரியாக இருக்கும் என்று இனியாவை அவமானப்படுத்தி வருகிறார்கள். இதனால் நொந்து போன இனியா, பாக்கியாவிடம் கஷ்டத்தை சொல்லவும் முடியவில்லை. சொல்லாமலும் இருக்க முடியவில்லை. அதனால் கோபிக்கு போன் பண்ணி நான் உங்களிடம் பேச வேண்டும் என்று சொல்லி விடுகிறார்.

உடனே கோபி, சுதாகர் வீட்டிற்கு வந்து வீட்டில் கெஸ்ட் வந்திருக்கிறார்கள். அவர்கள் இனியாவை பார்த்து பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால் கொஞ்ச நேரத்துக்கு இனியவை நான் கூட்டிட்டு போயிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு இனியாவிடம் என்ன பிரச்சனை ஏன் என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னாய் என கேட்கிறார்.

அப்பொழுது சுதாகர் வீட்டில் நடந்த பிரச்சனையும் நித்தேஷ் சைக்கோ மாதிரி நடந்து கொண்டதையும் இனியா, கோபியிடம் சொல்கிறார். உங்க அவசர புத்தியால் என்னுடைய வாழ்க்கையை வீணாகிவிட்டது, நான் ஆகாஷை மறந்துவிடுகிறேன் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று சொன்னேன். அதற்காக என்னுடைய வாழ்க்கையே பாழாக்கி விட்டீங்க என்று பீல் பண்ணி பேசுகிறார்.

இதை கேட்டதும் கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் நீ எதை நினைத்தும் கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆறுதல் படுத்தி அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக கோபி, பாக்யாவிடம் நான் இனியா கல்யாண விஷயத்தில் ரொம்பவே தவறு செய்து விட்டேன் என்று சொல்லி இனியா சொன்ன விஷயத்தை எல்லாத்தையும் பாக்யாவிடம் சொல்கிறார். இதை கேட்டு பாக்கியா அதிர்ச்சியாகி விடுகிறார்.