எதிர்நீச்சல் 2 சீரியலில் புத்தி பேதலித்து போன ஜனனி.. குணசேகரன் முன் டம்மியாக நின்னு ஜெயித்த ஜீவானந்தம்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியலில், எதிர்பார்த்தபடி கதைகள் இல்லாமல் தட்டு தடுமாறிக் கொண்டு வருகிறது. இது இயக்குனர் திருச்செல்வம் கதைதானா என்று சந்தேகப்படும் அளவிற்கு சீரியலின் ட்ராக் ஓடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சலின் முதல் பாகம் வெற்றியடைந்ததற்கு திருச்செல்வம் கதையை தாண்டி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் நடிப்பு.

அத்துடன் என்னதான் திருச்செல்வம் கதையை எடுத்திருந்தாலும் அதில் மாற்றங்களையும் டயலாக் போன்ற வசனங்களையும் மாற்றி அமைத்துக் கொடுத்தது மாரிமுத்து தான். அதனால் தான் அவர் இருக்கும்பொழுது மட்டுமே எதிர்நீச்சல் சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற முடிந்தது. அவர் மறைவிற்குப் பிறகு சீரியலும் நன்றாக இல்லை வசனங்களும் சரியில்லை என்று சொல்வதற்கு ஏற்ப மொக்கையாக போய்க் கொண்டிருக்கிறது.

குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் இயக்குனர் திறமையால் தான் ஜீவானந்தம் கேரக்டரும் சரி, திருச்செல்வத்தின் கதையும் ஜெயித்திருக்கிறது. தற்போது எதுவும் இல்லாத பட்சத்தில் திருச்செல்வம் கதையை ஓட்ட தெரியாமல் ஓட்டி வருகிறார். பரோலில் வந்திருக்கும் குணசேகரன் பண்ணும் அட்டகாசத்தை தாங்க முடியாத மருமகள்கள் போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு ஈஸ்வரி, உடல் ரீதியாகப் படும் அவஸ்தையை பார்த்து ஜனனி குணசேகரன் மற்றும் ஜான்சி ராணிக்கு கட்டுப்பட்டு அந்த வீட்டுக்குள் அடங்கிப் போவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. அதிலும் புத்தி பேதலித்தது போல் தர்ஷன் கடத்தலுக்கும் அறிவுக்கரசி குணசேகருக்கும் சம்பந்தம் இருக்கு என்று தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்.

இதனால் மொத்த கதையும் தலைகீழாக மாறி எதிர்நீச்சல் 2 சீரியல் பெயரை கெடுத்துக் கொண்டது. யாருடைய சகவாசமும் வேண்டாம் என்று பார்க்கவியை கூட்டிட்டு வாத்தியார் கொடைக்கானலுக்கு போனார். எங்க போனாலும் விடாமல் துரத்துவது போல் தர்ஷன் கொடைக்கானலுக்கு சென்று வாத்தியாருக்கு பார்கவிக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக அங்கே நிற்கிறார்.

தற்போது தர்ஷன் இருக்கும் இடம் கொடைக்கானல் தான் என்று தெரிந்த நிலையில் முல்லை மற்றும் அறிவுக்கரசி கொடைக்கானலுக்கு போகிறார்கள். அங்கே நடக்கப்போகும் கலவரத்தில் பார்க்கவியையும் தர்ஷனையும் காப்பாற்றும் விதமாக ஹீரோசம் காட்ட ஜீவானந்தம் வரப்போகிறார்.