எதிர்நீச்சல் 2 சீரியலில் பார்கவி தர்ஷனுக்கு முடிச்சு போட்ட ஜீவானந்தம்.. ஸ்கெட்ச் போட்ட அறிவு

Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தர்ஷனை அறிவு மற்றும் குணசேகரன் தான் கடத்தி வைத்திருப்பதாக நான்கு பெண்களும் சந்தேகப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் இவர்கள்தான் மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று குணசேகரன் நினைக்கிறார். ஆனால் இவர்கள் நினைப்பு எல்லாம் தவறு என்பதற்கு ஏற்ப கொடைக்கானலில் பார்க்கவி மற்றும் வாத்தியார் இருக்கிறார்கள்.

ஆனால் அங்கு எதார்த்தமாக போன தர்ஷனும் அறிவுக்கரசி அனுப்பிய அடியாட்களிடம் சிக்கிக்கொண்டார். அந்த வகையில் தர்ஷன் ஃபோட்டோவை அறிவுக்கு அனுப்பி இது யார் என்று கேட்ட பொழுது அறிவு இவனை தான் தேடுகிறோம் நான் அங்கு கிளம்பி வருகிறேன் என்று சொல்லி முல்லையும் அறிவும் கொடைக்கானலுக்கு கிளம்பி விடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் பார்க்கவி மற்றும் வாத்தியார் அறிவுகரசின் ஆட்களிடம் சிக்கிக்கொண்டார்கள். பிறகு அவர்களிடம் இருந்து தப்பித்து ஒரு காருக்குள் மறைந்து கொள்கிறார்கள். அந்த அடியாட்கள் கார் கதவை திறக்கும் போது ஹீரோ மாதிரி மாஸ் என்டரி கொடுத்து ஜீவானந்தம் வந்து விடுகிறார். உடனே அந்த அடியாட்கள் அங்கிருந்து போன பொழுது ஜீவானந்தம் அந்த காரில் ஏறுகிறார்.

உள்ளே இருக்கும் பார்கவி மற்றும் வாத்தியார், ஜீவானந்தனிடம் உதவி கேட்கிறார்கள். ஜீவானந்தமும் அவர்களை காப்பாற்றும் விதமாக உதவி செய்வதற்கு தயாராகி விட்டார். அந்த நேரத்தில் தர்ஷனை துரத்திட்டு வரும் அடியாட்கள் இடமிருந்து தர்ஷன் தப்பித்துக் கொள்வதற்காக ஜீவானந்தம் வரும் காரை வழிமறைத்து உதவி கேட்கிறார். ஜீவானந்தம் தர்ஷனை பார்த்ததும் காரை நிப்பாட்டி காப்பாற்றுகிறார்.

கடைசியில் ஜீவானந்தம் கஸ்டடியில் அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்கிறார்கள். இது எதுவும் தெரியாத சக்தி, ஜீவானந்தம் தான் இதற்கு பின்னணியில் இருந்து எல்லா காரியத்தையும் செய்திருக்கிறார் என்று தவறாக புரிந்து ஈஸ்வரியையும் சந்தேகப்பட போகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் கதிர் நினைத்தபடி ஜீவானந்தம் தான் இந்த வேலையை பார்க்கிறார் என்று மொத்த கோபத்தையும் வீட்டில் இருக்கும் பெண்களிடம் காட்டப் போகிறார்கள்.

அடுத்ததாக விஷயத்தை கேள்விப்பட்டு கொடைக்கானலுக்கு வரும் அறிவிடம் இருந்து தர்ஷனையும் பார்க்கவையும் காப்பாற்றும் விதமாக ஜீவானந்தம் ஆக்சன் காட்டப் போகிறார். மேலும் தர்ஷன் நினைத்தபடி இந்த கல்யாணமும் நடக்காமல் குணசேகரன் அறிவு தோற்றுப் போய் விடுவார்கள்.