செழியன் செஞ்ச தவறுக்கு திருப்பி பதிலடி கொடுக்கும் கர்மா.. பையனுக்காக நடுரோட்டில் நிற்கும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவை பற்றி தவறாக பேசிய லோக்கல் கவுன்சிலரை செழியன் அடித்துவிட்டார். இதனால் லோக்கல் கவுன்சிலர் கம்ப்ளைன்ட் கொடுத்து செழியனை அரெஸ்ட் பண்ணி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் பாக்யா தான் என்று ஒட்டுமொத்த குடும்பமும் பாக்யா மீது பழி போட்டு விட்டார்கள்.

ஜெனியும், பாக்கியா செய்த விஷயம் பிடிக்காததால் அப்பா கூப்பிட்டதும் வீட்டை விட்டு போய்விட்டார். இதனால் நொந்து போன பாக்கியா, செழியனை எப்படியாவது வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் லோக்கல் கவுன்சிலரிடம் போய் பேசுகிறார். ஆனால் அவர் உங்க பையன் இனி வெளியே வரவே முடியாது என்று தீர்மானமாக சொல்லிவிடுகிறார்.

அடுத்ததாக எம்எல்ஏ வை சந்தித்து பேசி உதவி கேட்கலாம் என்று பாக்கியம் எம்எல்ஏ வீட்டு வாசலில் இருக்கிறார். அப்பொழுது அங்கே வந்த இன்னொரு கவுன்சிலர் பாக்யாவுக்கு உதவும் வகையில் எம்எல்ஏ இடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். அதனால் பாக்கியா மற்றும் செல்வி அக்கா எம்எல்ஏ விட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படியாவது செழியினை வெளியே கூட்டிட்டு வரவேண்டும் என்று போராடுகிறார். ஆனால் இந்த விஷயத்தில் செழியன் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், செல்வி மகன் ஆகாஷை அடித்து துன்புறுத்தி கொடூரமாக நடந்து கொண்ட செழியனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது கர்மா ஜெயிலுக்குள் அனுப்பி வைத்திருக்கிறது.

செல்வி அக்கா கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டாங்க, யாரும் கேட்க ஆள் இல்லை என்று ஓவராக துல்லிய செழியனுக்கு இது தேவைதான். ஆனாலும் ஜெனி கோபத்தை குறைக்கவும் தன்னால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையை சரி செய்யும் விதமாக செழியனே வீட்டுக்கு கூட்டிட்டு வர பாக்கியா நடுத்தெருவில் செல்வி அக்காவுடன் சுற்றி வருகிறார்.