Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், ரகுராம் குடும்பத்திற்காக மாயா செய்த நல்ல விஷயம் எதுவும் வெளியே வராமல் இருப்பது தான் மாயாவிற்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முதலில் ரகுராமுக்கு மாயா ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை நம் குடும்பத்திற்காக எவ்வளவு விஷயங்களை பண்ணியிருக்கிறார் என்று தெரிய வேண்டும்.
அப்பொழுதுதான் ரகுராம், மாயாவை புரிந்து கொள்வார். ஆனால் அது எதுவும் தெரியாமல் குடும்பத்திற்காக எல்லா கஷ்டத்தையும் தன் தோளில் சுமந்து கொண்டு பாடுபடும் மாயாவுக்கு தற்போது ஏகப்பட்ட பிரச்சினைகள் வர ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக மாயாவிடம் இருந்து சீனுவை பிரிக்க வேண்டும் என்று லிங்கா பிளான் போட்டுவிட்டார்.
அதற்காக சீனுவின் அம்மாவிடம் நகை எல்லாம் கொடுத்து ஆசை காட்டி எப்படியாவது மாயாவை வீட்டை விட்டு அனுப்பி என்னுடைய மகள் சாருக்கும் உங்க பையன் சீனுவுக்கும் கல்யாணம் நடத்தி வைக்க வேண்டும் என்று சொல்கிறார். உடனே சீனுவின் அம்மாவும் அதற்காகத்தான் நான் பாடுபடுகிறேன். நீங்கள் ஆசைப்படுகிற மாதிரி கூடிய சீக்கிரத்தில் மாயாவை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி சாறுவை என் மருமகளாக ஆக்கிக் கொள்வேன் என்று சொல்கிறார்.
அதற்கு ஏற்ற மாதிரி சீனுவும் குடித்துவிட்டு வீட்டில் பிரச்சனை பண்ணுவதால் இதற்கெல்லாம் காரணம் மாயா தான் என்று ரகுராம் தவறாக புரிந்து கொள்கிறார். இதனால் தொடர்ந்து மாயாவுக்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் உங்க சகவாசமே வேண்டாம் என்று கதிரை நம்பி போன தனம், கதிருடன் சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கப் போகிறார். ஆனால் இதை கெடுக்கும் விதமாக கார்த்திக், தனத்தின் வீட்டிற்குள் சென்று பிரச்சனை பண்ண போகிறார்.