விஜய் கொடுக்க நினைத்த சர்ப்ரைஸ் பிளானை தெரிந்து கொண்ட காவேரி.. சப்போர்ட்டாக நிற்கும் கங்கா

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், உயிருக்கு போராடும் வெண்ணிலா தற்கொலை செய்து இருக்கிறார் என்று போலீஸ் நம்பி விஜய்யை விசாரிப்பதற்காக விஜயை தேடுகிறார்கள். ஆனால் விஜய், லாயர் சொன்னபடி வெண்ணிலா கண் முழிக்கும் வரை தலைமறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கெஸ்ட் ஹவுஸில் இருக்கிறார்.

இதனால் ஆஸ்பத்திரியில் இருக்கும் காவிரியிடம் போலீஸ் விசாரணை செய்கிறார்கள். இதனை அடுத்து காவிரி வீட்டு பக்கத்தில் தங்கி இருந்த விஜய் வீட்டிற்கும் போலீஸ் செக் பண்ணி பார்க்கிறார்கள். ஆனால் அங்கே விஜய் இல்லாததால் காவேரியிடம் போலீஸ் வார்னிங் கொடுக்கிறார்கள். இதற்கிடையில் விஜய் இடம் மறைமுகமாக காவிரி பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

அடுத்ததாக காவிரிக்கு விஜய் போன் பண்ணி ஆஃபீஸில் சின்ன பிரச்சனை இருக்கிறது, நீ போய் பாத்துட்டு வா என்று சொல்கிறார். அதன்படி ஆபீசுக்கு போன காவேரி எல்லா பிரச்சினையும் சரி செய்து விட்டு செக்கில் கையெழுத்து போட வேண்டும் என்பதற்காக யோசித்துக் கொண்டிருக்கிறார். அதன் பின் அங்குள்ள மேனேஜர் வந்து ஆபீஸில் இருக்கும் எல்லா பொறுப்பும் உங்க பெயரிலும் மாற்றப்பட்டிருக்கிறது.

அதனால் நீங்களும் கையெழுத்து போடலாம் என்று சொல்கிறார். அதாவது விஜய் சார் உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக இதைத்தான் ஏற்பாடு பண்ணி வைத்திருந்தார். அப்பொழுதுதான் காண்ட்ராக்ட் கல்யாணம் வெளிவந்து எல்லாம் சொதப்பிவிட்டது என்று சொல்கிறார். உடனே காவிரி சந்தோஷப்பட்டு இந்த சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகத் தான் தன்னை கூட்டிட்டு போக நினைத்தார் என புரிந்து கொண்டார்.

அடுத்ததாக காவிரி இங்குள்ள பிரச்சினையில் எதுவும் சிக்கிடக் கூடாது என்பதற்காக சாரதா ஊருக்கு கூட்டிட்டு போக வேண்டும் என சொல்கிறார். உடனே கங்கா எதுக்கெடுத்தாலும் சும்மா காவிரியை கூட்டிட்டு போக வேண்டும் என்று சொல்லிக்கிட்டே இருக்காத. அவளுடைய பிரச்சனையை காவிரி பார்த்துக் கொள்வாள் என்று சொல்லிவிட்டு காவிரியை உள்ளே கூட்டிட்டு கங்கா போய் விடுகிறார்.