வெண்ணிலா முன் ஜோடியாக கைகோர்த்து நின்ன காவேரி விஜய்.. கடுப்பில் இருக்கும் ராகினி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மீது எஃப்ஐஆர் போடலாம் என்று போலீஸ் முடிவு பண்ணி விட்டது. அந்த நேரத்தில் காவிரி வந்து பசுபதி நடத்தும் டிராமா தற்போது வெளிச்சத்துக்கு வரப்போகிறது என்று சொல்லி வெண்ணிலா பேசிய வீடியோவை ஃபோனில் காட்டுகிறார். அதை பார்த்ததும் பசுபதி அன்பரசு மற்றும் வெண்ணிலவின் மாமா காரியமே கெட்டுப் போய்விட்டது என்று துவண்டு போய் விட்டார்கள்.

ஆனாலும் அன்பரசு, இந்த வீடியோவை வெண்ணிலாவை மிரட்டி தான் இந்த காவிரி எடுத்திருப்பார். அதனால் இது எதையும் நம்ப முடியாது என்று சொல்கிறார். என்னால் காவிரி எடுத்த முயற்சி தோல்வியடைந்திடும் என்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் அன்பரசி மனைவி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விடுகிறார். வந்ததும் விஜய் மீது எந்த தவறும் இல்லை முழுக்க முழுக்க அன்பரசு மீது தான் தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ற மாதிரி நடந்த உண்மையை சொல்லிவிடுகிறார்.

பிறகு விஜய்யும் கெத்தாக வெளியே வந்த நிலையில் காவிரியும் விஜய்யும் ஜோடி போட்டு ஒன்றாக நிற்கிறார்கள். அத்துடன் விஜய் அவருடைய சித்திக்கு நன்றி தெரிவித்து பசுபதியை அவமானப் படுத்துகிறார். ஆனாலும் இந்த பசுபதி இதற்கெல்லாம் அசராத மாதிரி கொஞ்சம் தெனாவட்டில் தான் இருக்கிறார். ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் காவிரி மற்றும் விஜய் கிளம்பும் பொழுது அங்கே ராகினி வெண்ணிலா வந்து விடுகிறார்கள்.

வந்ததும் விஜய் இந்த பிரச்சினையில் இருந்து வெளிவந்ததையும் காவிரியுடன் ஒன்றாக நினைத்ததை பார்த்து வெண்ணிலா ராகினி கடுப்பில் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த ஒரு பிரச்சினை இதோடு முடிக்கும் விதமாக காவிரி செஞ்ச செயல் இனி வெண்ணிலா மூலம் எந்த பிரச்சினையும் வராதபடி சரி செய்து விட்டார்.